• Apr 24 2024

வணங்கான் படத்திலிருந்து சூர்யாவை மட்டுமல்ல சென்ஷேசன் ஹீரோயினையும் மாற்றிய பாலா?- கதாநாயகி யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


எப்போதுமே வித்தியாசத்தை புகுத்தி ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற போல் திரைப்படம் இயக்கி வருபவர் இயக்குநர் பாலா. இவர் நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.ஆனால் இப்படத்தில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சூர்யா இப்படத்திலிருந்து விலகினார்.

அதன்படி தற்போது நடிகர் அருண் விஜய்யை ஹீரோவாக ஒப்பந்தம் செய்து மீண்டும் படப்பிடிப்பு கன்னியாகுமாரியில் இடம் பெற்று வருகின்றது.இப்படத்தின் முதல் பாகத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி ஷெட்டியே இப்படத்திலும், ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஹீரோயினை பாலா மாற்றியுள்ளாராம்.


அதன்படி கதிர் நடிப்பில் வெளியான ஜடா' என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்த ரோஷினி பிரகாஷ் என்கிற இளம் நடிகை தான் வணங்கான் படத்தில் இணைந்துள்ளதாகவும் இப்படப்பிடிப்பானது இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement