• Apr 20 2024

பாலா- சூர்யா படத்தில் இணையும் வேறு நாட்டு நடிகர்கள்-இது தான் காரணமாம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா பிஸியான நடிகராக வலம் வருவதோடு தற்பொழுது தனது 41 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை இயக்குநர் பாலா இயக்குகின்றார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியகுமாரியில் விறு விறுப்பாக தொடங்கப்பட்டு அங்கு முடிவடைந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்கப்பட உள்ளது.

இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று தயாரிப்பு தரப்பு விளக்கம் கொடுத்திருந்தது.

இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் நிறைய வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ளார்களாம். படத்தின் கதைப்படி சுற்றுலாப் பகுதியான கன்னியாகுமரியில் கதாநாயகியான கீர்த்தி ஷெட்டி டூரிஸ்ட் கைடாக நடிக்கிறாராம்.

மேலும் அது சம்மந்தமானக் காட்சிகளுக்காக வெளிநாட்டு நபர்களை அதிகளவில் நடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

https://www.youtube.com/embed/qcWj_4ZhcMo

பிறசெய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement