• Apr 24 2024

ஆயிஷா சொன்ன வார்த்தை -சோகத்தில் ராம்-நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.இந்நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளார்கள்.இந்நிலையில் 57வது எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்....

ஆரம்பத்திலேயே தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி இடம்பெறுகின்றது.இதில் ஷிவின், மணிகண்டன், தனலட்சுமி ஆகியோர் பங்கு கொள்கின்றனர்.இவ்வாறுஇருக்கையில் மூன்றாவது முறையாக மணிகண்டன் தலைவராக வென்றெடுத்தார்.அதன் பின் டீம் எல்லாம் பிரித்திட்டு இருந்தார்.

அதன் பிறகு அசீம் கிச்சன் டீமில் இருந்துகொண்டு இருக்க இங்காலே ஒரு டீமாக  ஏடிகே, கதிரவன், ராம் எல்லாம் உட்கார்ந்து இருந்து கொண்டு அசீம் எவ்வளவு பழத்தை சாப்பிடுகிறாரு என பார்த்துக்கொண்டு இருக்கையில் அசீம் பப்பா பழத்தை சாப்பிடுவிடுகின்றார்.இதையும் அவர்கள் பார்த்து விட்டனர்.இதே நாம ஏதும் கேட்ட ஒரு பழத்தை தானே சாப்பிட்டேன் எனக் கூறுவான் என சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

அப்புறம் எவிக்சனுக்கான டாஸ்க் இடம்பெற்றது.அதிக வாக்குகளை  ஆயிஷா பெற்று இருந்தார்.அதற்கு பிறகு ராம் மற்றும் ஜனனி வாக்குகளை பெற்று இருந்தார்.அதன் பிறகே தான் அசீம் பெற்று இருந்தார்.இதே போல் இந்தவாரம் டபிள் எவிக்சன் என்று கூறியிருந்தார் கமல்.

நாமினேசன் எல்லாம் முடிந்து வெளியில் இருக்கும் போது ஆயிஷா தானும் ராமும் தான் இந்த வாரம் வெளியில் போகப்போவதாக கூறினார்.ஆயிஷா சொல்லும் போது கெத்தா பரவாயில்லைப்பா..நான் வெளியில போனா கிறிஸ்மஸ் newyear எல்லாம் கொண்டாடடுவன் எனக் கூறிவிட்டு பெட்டில் சோகமாக படுத்து இருக்கின்றார்.

இதன் பின்னர் ADK வந்து என்னாச்சு எனக் கேட்க... ஒரு 70வது நாளுக்கு பிறகு வீட்டை விட்டு போன பரவாயில்லை..வேளைக்கே போக ஒரு மாதிரி தான் இருக்கு என கவலையாக சொல்கின்றார்.

அப்புறம் ரச்சிதாவும் விக்ரமனும் பேசிட்டு இருந்தார்கள்.அதாவது ரச்சிதாவிடம் அசீம் அதிக முட்டைகளை எடுத்து சாப்பிடுகிறார்.அவரை எடுக்க வேண்டாம் என சொல்றீங்களா எனக் கேட்க சொல்லுறனான் தானே என ரச்சிதாவும் சொல்கின்றார்.அதற்கு நீங்க சொவ்ற்றா சொல்லி இருப்பீங்க..என வடிவாவே சொல்லுங்க என சொல்கின்றார்.

அப்புறம் லக்சரி பட்ஜட் டாஸ்கில் மணிகண்டன் வின் பண்ணியதும் சிக்கன் மற்றும் ஜஸ்கிறீம் வாங்கிக்கொண்டு வருகிறார்.எல்லோரும் சரியான குஷி.13 பேருக்கு தான் சிக்கன் வந்து இருந்தது.அதில் அமுதவாணன் நான் சிக்கன் சாப்பிடுறது இல்லை எனக் கூறி இருந்தார்.அதன் பிறகு அசீம் மணிகண்டனிடம் சிக்கன் விசயத்தில் தனலட்சுமி டீசன்ட் ஆக நடந்து கொண்டு இருந்ததார்.ஆனால் ஜனனி ஏன் தான் சாப்பாடு விசயத்தில் இப்படி நடந்துகொண்டு இருக்கிறதோ தெரியல்லை எனக் கூறுகின்றார்.

அதன் பிறகு டாஸ்கில் வென்ற கதிரவனுக்கு கண்ணை மூடிட்டு இருக்கனும் என்று கூற அவரும் அப்படியே இருந்துகொள்ள எல்லோரும் ஜாலியாக கலாய்த்துக்கொண்டு இருந்தார்கள்.அதன் பிறகு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நடிகர் பாத்திரம் குடுத்து இந்த வாரம் நடித்து காட்டனும் எனக் கூறப்படுகின்றது.அதே போல் அசீமிற்கு எம்.ஜி.ஆர் இப்படி எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றது.இத்துடன் முடிவடைந்தது.


Advertisement

Advertisement

Advertisement