• Apr 23 2024

சத்யா கெட்டப்பில் ரசிகர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிய ஆயிஷா... இப்படி ஒரு நல்ல மனசும் இருக்கா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக நான்காவது வாரத்தை கடக்க உள்ளது. இதில் போட்டியாளர்களிடையே நாளுக்கு நாள் சண்டை, கோபம், அழுகை என உணர்ச்சிகளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

குறிப்பாக இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்குபற்றிய நிலையில் தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அதில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் தான் ஆயிஷா. 


இவர் குறித்த சுவாரஷ்யமான சம்பவங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என்பன சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் தற்போதும் ஒரு வீடியோ வெளியாகி இருக்கின்றது.

அதில் அவர் சத்யா கெட்டப்பில் சென்று ரசிகர்களை நேரடியாக மீற் பண்ணி இருக்கின்றார். அதிலும் குறிப்பாக அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களுடன் செல்பி எடுத்து அசத்தி இருக்கின்றார். அங்கிருந்த குழந்தை ஒன்றையும் தூக்கி கொஞ்சி இருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது ரசிகர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டும் மகிழ்ந்திருக்கின்றார் ஆயிஷா. அத்தோடு அவர்கள் ஆயிஷாவிற்கு தங்களது மகளைப் போன்று நினைத்து உணவு ஊட்டியும் விடுகின்றனர்.


இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்து இருக்கின்றார். மேலும் இதுதொடர்பாக ஆயிஷாவின் நண்பர்கள் சதீஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் பேட்டி ஒன்றில் தெரிவிக்கையில் "வெளிய எப்பிடி நாங்க ஆயிஷாவைப் பார்த்தமோ அப்படித்தான் அவங்க பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் இருக்கின்றார்" எனக் கூறியிருக்கின்றார்கள்.

மேலும் குறும்படம் போட்ட சமயத்தில் ஆயிஷா தான் ரொம்பவே பதற்றப்பட்டார் அது ஏன் எனக் கேட்டதற்கு அதற்கு அவர்கள் எல்லாருமே தானே பதற்றப்பட்டார்கள் என கூறியுள்ளனர் அவரின் நண்பர்கள். மேலும் கமல் சேரை ஆயிஷா எதிர்த்துப் பேசவில்லை. அவர் தன்னுடைய மலையாள மொழியில் தான் பேசினார். ரசிகர்கள் அதைத் தப்பாக புரிந்து விட்டார்கள் எனவும் கூறியுள்ளனர்.


அத்தோடு பெரியவங்களுக்கு ஆயிஷா எப்போதுமே மரியாதை கொடுத்துப் பேசித் தான் பார்த்திருக்கோம். ஆயிஷா பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது கூட எல்லார்கிட்டேயும் ஆசீர்வாதம் வாங்கிவிட்டுத் தான் வந்திருந்தார். பாக்கிறவங்க தான் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க. அவ கமல் சாரிற்கு மரியாதை தான் கொடுத்தார். எதிர்த்துப்பேசவில்லை. அவரின் சொல்லாடல் தான் தப்பாக மாறி விட்டது" எனவும் திரும்பத் திரும்பக் கூறியுள்ளனர் அவரின் நண்பர்கள்.

Advertisement

Advertisement

Advertisement