• Apr 20 2024

நள்ளிரவில் பைத்தியம் பிடித்தது போல கத்திய ஆயிஷா- பதறிப்போய் எழும்பிய ஹவுஸ்மேட்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. முன்னதாக ஹிந்தி மொழியில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 6 வது சீசனை தொட்டுள்ளது. 

அனைத்து மொழிகளிலும் அங்குள்ள பிரபலங்களே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். அதேபோல தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.தற்போது 28 நாட்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சியிலிருந்து வரை 4 பேர் வெளியேறியுள்ளனர்.


அந்த வகையில் நேற்றைய தினம் தான் ஷெரினா வெளியேறினார். இவர் வீட்டை விட்டு வெளியேறியதற்கு தான் அதிகமாக வீட்டில் மலையாள மொழி பேசினதே காரணமாக இருந்தது. அதனால் தான் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று ஷெரினா தெரிவித்தார். அத்தோடு யாரிடமும் எதுவும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறினார்.


இவர் எலிமினேட் ஆகிப் போனதை தாங்க முடியாத ஆயிஷா கதறி அழுது கொண்டிருந்தார். அவரை ஜனனி மகேஷ்வரி ரச்சிதா ஆகியோர் சமாதானப்படுத்தினார்கள்.இருப்பினும் ஆயிஷா யாருடனும் பேச விருப்பமில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆயிஷா நள்ளிரவில் நித்திரையில் இருந்து எழும்பி கதறி அழுதுள்ளதோடு பிக்பாஸ் நான் வீட்டை போகப் போறன் என்னை விடுங்க எனக் கத்தியுள்ளார். இவரை ஏனைய ஹவுஸ்மேட்ஸ் சமாதானம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement