• Mar 29 2024

பிக்பாஸ் டைட்டில் ஜெயித்த பிறகு அசீம் வெளியிட்ட முதல் வீடியோ- வெற்றிபெற்ற பணத்தை வைத்து செய்யப்போகும் காரியம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 கடந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். மேலும் சீசன் துவங்கிய சில நாட்களிலேயே சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் என நிகழ்ச்சி சூடுபிடிக்க துவங்கியது.

எனவே மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனை காண ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். இதையடுத்து நிகழ்ச்சி ஆரம்பமான முதல் சில வாரங்களில் ரசிகர்களின் பெறாதவரை பெற்ற போட்டியாளராக ஜி.பி முத்து இருந்து வந்தார். ஆனால் தன் குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாது என்ற காரணத்தினால் போட்டியை விட்டு தானாக வெளியேறினார்.


இதையடுத்து ஒவ்வொரு வாரமும் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் வெளியேற இறுதி வாரத்தில் கதிரவன், அமுதவாணன், ஷிவின், மைனா, அசீம், விக்ரமன் ஆகியோர் இருந்தனர். இதில் கதிரவன் மற்றும் அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேற மைனா குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் விக்ரமன், அசீம், ஷிவின் ஆகியோர் நுழைந்தனர். இதில் விக்ரமன் தான் பிக் பாஸ் டைட்டிலை தட்டி செல்வார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அசீம் அதிகமான வாக்குகளை பெற்று பிக்பாஸ் டைட்டிலுக்கும், ஐம்பது லட்சத்திற்கும் சொந்தக்காரரானார்.


இதையடுத்து சிலர் அசீம் வென்றதை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அசீமின் ஆதரவாளர்கள் அவரின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அசீம் தான் வெற்றி பெற்றது குறித்து ஓர் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் எனக்கு ஓட்டுப் போட்ட அனைத்து மக்களுக்கு் நன்றி நீங்க இல்லை என்றால் என்னால் இந்த டைட்டிலை பெற்றிருக்க முடியாது.நான் எனக்கு கிடைத்த 50 லட்சத்தில் 25 லட்சத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு தாய் தந்தை இன்றி இருக்கும் பிள்ளைகளின் கல்விக்காக கொடுக்கப் போகின்றேன். அதனை கொடுத்து விட்டு விரைவில் அறிவப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன தான் சண்டை போட்டாலும் அசீமின் இந்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருவதோடு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement