• Apr 18 2024

அசீமால் புலம்பி தள்ளிய அமுதவாணன்..கடைசியில் நடந்த ட்விஸ்ட்..85வது நாளில் நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 85 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.இந்நிலையில் 85வது எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அதாவது இன்று ஹாப்டன்சி டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.அதில் ஏ.டி.கே மற்றும் அசீம் பங்குபற்றுகிறார்கள்.இரண்டு பேரும் மாறி மாறி விவாதம் பண்ணிட்டே இருக்கனும் அதில் யார் வெல்லுகிறாரே அவரே ஹாப்டன் ஆகுவார் என்ற நிலையில் ஏ.டி.கே இந்தவாரம் ஹாப்டன் ஆகிடுவார்.

சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். அப்படி ஒரு சூழலில் இந்த வாரம் நாமினேஷன் டாஸ்க்கிற்கு ஒரு புதிய முறையை பிக் பாஸ் கையாண்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்ற போட்டியாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு நாமினேஷன் செய்வார்கள்.

ஆனால் இந்த முறை ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் இத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடி மக்களை எப்படி எல்லாம் சுவாரஸ்யப்படுத்தினார்கள் என்பது குறித்து பேச அதன் அடிப்படையில், ஒரு நபர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் பிக் பாஸ் தெரிவிக்கிறார். சில விதிமுறைகளுடன் தங்களைப் பற்றி போட்டியாளர்கள் பேச வேண்டும் என பிக் பாஸ் குறிப்பிட, அனைத்து போட்டியாளர்களும் அதற்கேற்ப பேசிக் கொண்டே இருக்கின்றனர்.

அதன் பிறகு பிக்பாஸ் கேள்விகேட்டு ஒவ்வொருதரையும் வச்சு செய்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.அதன் பிறகு அசீம் தான் பிக்பாஸ் இடம் நிறைய நேரம் பேசிட்டே இருந்தார்.

இவ்வாறுஇருக்கையில்  அசீமை நோமினேசன் ப்ரீ டாஸ்க்கிற்கு செலக்ட் ஆகினார்.இதானால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பல பேர் புலம்பி கொண்டு இருந்தார்கள்.

அதிலும் அமுதவாணன் தான் அதிகமாக புலம்பி கொண்டு இருந்தார்.அதன் பிறகு இன்று டிக்கெட்டு பினாலே நடக்கப்போகின்றது என பிக்பாஸ் அறிவித்து இருந்தார்.இவ்வாறுஇருக்கையில் இதன் பற்றி முழுமையான வீடியோ அறிய கீழுள்ள காணொளியை கிளிக் செய்து பார்க்கவும்................




Advertisement

Advertisement

Advertisement