நேற்றைய தினத்திலிருந்து போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதம், மற்றும் சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த வகையில் நேற்று பொம்மை டாஸ்க் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
நேற்றைய தினம் டாஸ்க்கில் மணிகண்டன் மற்றும் ஜனனி ஆகியோர் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து இன்றைய தினம் வெளியாகிய முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் பொம்மை எடுத்துக் கொண்டு போகும் போது நிவாஷினி மற்றும் ஷெரினா ஆகியோர் கீழே விழுந்துள்ளனர்.
இதனால் கடுப்பான அசீம் தனலக்ஷ்மியைப் பிடித்து திட்டுகின்றார். நீயும் பொண்ணு தானே உன்னோட பலத்தை காட்ட இது தான் இடமா? இப்படிப் பிடிச்சுத் தள்ளுறியே எனக் கேட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!