தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் வார முடிவில் யாரும் எலிமினேட் செய்யப்படவில்லை. ஆனால் இரண்டாவது வாரத்தில் இரண்டு பேர் வெளியேறினர்.
தற்போது 19 போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.மேலும் இந்த வாரம் ஆரம்பித்ததில் இருந்து பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகின்றது.இதில் போட்டியாளர்கள் தங்கள் கைவசம் உள்ள பொம்மையை பாதுகாத்துக்கொள்ளவும், தங்கள் அணியில் இருப்பவர்களின் பொம்மையை காப்பாற்றவும் கடுமையாக போட்டி போட்டு வருகிறார்கள்.
இதில் அசீம், ஷெரினா, அசல், ஆயிஷா, மகேஸ்வரி ஆகியோர் ஒரு அணியாக இருந்து விளையாடி வருகின்றனர். அதேபோல் தனலட்சுமி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ராபர்ட், விக்ரமன் ஆகியோர் ஒரு அணியாக பிரிந்து விளையாடுகின்றனர். என்றுமில்லாதவாறு இந்த முறை அமுதவாணன் அசீமிற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.
அநத வகையில் தற்பொழுது வெளியாகிய ப்ரோமோவில் அசீமை மன்னிப்புக் கேட்கச் சொல்லி விக்ரமன் கூறுகின்றார். இதனால் மகேஷ்வரி சீன் போடுறீங்களா எனக் கேட்கிறார். இது தவிர அசீம் பைத்தியம் பிடித்த மாதிரி கத்துவதையும் காணலாம்.
Listen News!