• Apr 17 2024

அந்த லெட்டரை கேட்டு கதறி அழுத அசீம்...மனதை உருக்கிய சம்பவம்...பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.அத்தோடு  கடந்த வாரம் ஜனனி வெளியேறிய நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் 73வது எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்...

இந்த வாரம் பிக்பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாறி உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக மாறி விளையாடி வருகின்றனர்.அதில் அமுதவாணன் கதிரவன் மைனா நந்தின் ஆகிய மூன்று பேரும் டீச்சர்ஸ் ஆக இருக்கிறாங்க.மற்றவங்க எல்லோரும் குழந்தைங்களாக இருக்கிறாங்க.அதுவும் அவங்க 2k கிட்ஸ் ஆக இருக்கிறாங்க.அதில் அமுதவாணன் பாட்டு டீச்சராக இருக்கின்றார்.

ஆனால் மாணவர்கள் எல்லோரும் ஓவராக நடிச்சு இருந்தாங்க.அதை கதிரவனும் கூறி இருந்தார்கள்.

இந்த டாஸ்க் முழுவதும் காமெடியாக விளையாடி இருக்கும் போது கதிரவனுடன் தனலட்சுமி சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டார்.அதாவது நடிக்க எல்லாம் வேண்டாம் என கதிரவனையே லைற்றா கோபத்தை வரவச்சிட்டாங்க.உங்க முகத்தில் கோவம் வருது என வம்பிழுத்தாங்க தனலட்சுமி.

அதன் பிறகு அவங்களுக்கு ஓவியம் வரையும் போட்டி இடம்பெற்றது.அதில் ஷிவன் பெண்களுக்கு ஏற்படும் அநீதி பற்றி வரைந்து அதன் முதல் பரிசை பெற்றுக்கொண்டார்.அந்த ஓவியத்தை பார்த்து ரச்சிதா கண்கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார்.கொஞ்சநேரத்திற்கு பின் இந்த டாஸ்க் நிறுத்தி வைத்து விட்டார்கள்.

அதன் பிறகு அவங்களுக்கு ஒரு கடிதம் எழுதுங்க எனக் கூறியதும் எல்லோரும் எழுதி அழுது இருந்தார்கள்.அப்புறம் ரச்சிதா குழந்தை பற்றி சொல்லி அழுது இருந்தார்.அசீம் ஷிவின் என எல்லோரும் தமது கதையை கூறி இருந்தார்.அதன் போது ADK தனது மகனுக்கு கடிதம் எழுதி படிக்கும் போது அசீம் தனது குடும்பத்தை நினைத்து கதறி அழ ஆரம்பித்தார் .உடனே விக்ரமன் அவரை சமாதானம் செய்தார்.

இவ்வாறாக இந்த எபிசோட் முடிவடைந்தது.இதன் பற்றி முழுமையைான வீடியோ பார்க்க கீழுள்ள காணொளியை கிளிக் செய்து பார்க்கவும்...




Advertisement

Advertisement

Advertisement