• Apr 23 2024

நடந்தது தெரியாமல் மைனா நந்தினியை மாட்டி விட்ட அசீம்- கதிரவன் கூறிய ஷாக்கிங் நியூஸ்- செம காமெடி

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. சுமார் 80 நாட்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தற்பொழுது 8 பேர் மடடும் வீட்டிற்குள் உள்ள நிலையில்  Ticket To Finale சுற்று ஆரம்பமாகியுள்ளது.

இதற்கு மத்தியில் நாமினேஷன் டாஸ்க்கிற்கு புதிய முறையையும் கையாண்டுள்ளது பிக் பாஸ். பொதுவாக ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்ற போட்டியாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு நாமினேஷன் செய்வார்கள். ஆனால் இந்த முறை தங்கள் ஆடியது குறித்த சுவாரஸ்ய கருத்துக்களை பேச வைத்து அதில் ஒருவரை நாமினேஷன் ப்ரீ Zone என குறிப்பிட்டிருந்தது. இதில், அசீம் வெற்றி பெற்றுள்ளார்.


இந்த நிலையில், அசீம் தூங்கும் போது நடந்த சம்பவம் ஒன்று, தற்போது பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.பொதுவாக பிக் பாஸ் வீட்டிற்குள் மதியம் யாரும் தூங்க கூடாது. அப்படி ஒருவேளை தூங்க முற்பட்டால் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அவர்களை எழுப்பி விடுவது என்பது பிக் பாஸ் விதியாக உள்ளது.

 இந்த சூழலில் கட்டிலில் படுத்திருக்கும் அசீம், லைட்டாக கண்ணை மூடி தூங்கி குறட்டை விடவும் செய்கிறார். இதை கவனித்த மைனா நந்தினி, தான் கண்ணை மூடியதற்கு நாய் சத்தம் கேட்டதாகவும் ஆனால் அசீம் குறட்டை விட்டு தூங்கிய பிறகும் சத்தம் கேட்கவில்லை என்றும் பிக் பாஸிடம் முறையிட, அடுத்த சில நொடிகளில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு கண் திறக்கவும் செய்கிறார் அசீம்.தொடர்ந்து பேசும் அசீம், "மைனா அங்க பாரு" என மைனா நந்தினி தூங்கியதால் தான் நாய் சத்தம் கேட்டதாக குறிப்பிடுகிறார். 


இவை அனைத்தையும் கவனித்த கதிரவன், நீ தூங்கியதால் தான் நாய் சத்தம் கேட்டது என்றும் சொன்னதே மைனா தான் என்றும் ஜாலியாக சிரித்துக் கொண்டே சொல்கிறார்.இது ஒருபுறம் இருக்க, கேப்டனாக இருக்கும் ADK விடம் உங்கள் ஆட்சியில் போட்டியாளர்கள் தூங்குவதாகவும் ஜாலியாக  அமுதவாணன் முறையிடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement