• Apr 24 2024

விஜய்க்கு எழுதிய ஸ்கிரிப்ட்டில் அர்ஜுன் நடித்த சூப்பர் ஹிட் படம் .. ஓஹோ இப்படியெல்லாம் நடந்துருக்கா?

Jo / 10 months ago

Advertisement

Listen News!

இந்தியாவில் அதிகம் வசூல் செய்யும் நடிகர்களில் ஒருவராக விஜய் திகழ்ந்துவருகிறார். அவர் சந்தித்த கேலிகளும், கிண்டல்களும் அளவுக்கு அதிகமானவை. குறிப்பாக தன்னுடைய கரியர் ஆரம்பத்தில் ரொம்பவே உருவ கேலியை பார்த்த நடிகர்களில் விஜய்யும் ஒருவர். இருப்பினும் அது அத்தனையையும் தனது திறமையை கொண்டு சமாளித்தார்.

ஆக்‌ஷன், நடனம், எமோஷனல், காமெடி என எதை கொடுத்தாலும் அதில் தனது அடையாளத்தை லாவகமாக பதித்துவந்ததால் கமர்ஷியல் கிங்காக உயர்ந்தார் விஜய். இதன் காரணமாக அவருக்கு ரசிகர்களும் அதிக அளவு பெருகி இளைய தளபதியிலிருந்து தளபதி இடத்துக்கு உயர்ந்திருக்கிறார்.

 இந்தச் சூழலில் சுராஜ் இயக்கத்தில் வெளியான மருதமலை படத்தில் விஜய்தான் நடித்திருக்க வேண்டியது என்ற தகவல் தெரியவந்திருக்கிறது. அதாவது, சுராஜின் இயக்கத்தில் அர்ஜுன், வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் மருதமலை. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக காமெடி காட்சிகள் எல்லாம் குபீர் ரகம்.



மருதமலை கதையை முதலில் விஜய்யிடம்தான் சுராஜ் கூறியிருக்கிறார். கதையை கேட்ட விஜய்க்கும் பிடித்துப்போக படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் வேறு ஒரு படத்துக்கு கொடுத்த டேட்டும், இந்தப் படத்துகாக ஒதுக்கப்பட வேண்டிய டேட்டுகளும் முட்டிக்கொண்டதால் படத்திலிருந்து விஜய் விலகியிருக்கிறார். இந்தத் தகவலை இயக்குநர் சுராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

சுராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர். அவர் இயக்கிய தலைநகரம் படம் மெகா ஹிட்டானது. அதேபோல் தனுஷை வைத்து இயக்கிய படிக்காதவன், அர்ஜுனை வைத்து இயக்கிய மருதமலை உள்ளிட்ட படங்களும் ஹிட்தான். அவரது படங்களில் எப்போதும் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடைசியாக வடிவேலுவை வைத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கினார். அப்படம் தோல்வி படமாக அமைந்தது.


Advertisement

Advertisement

Advertisement