• Mar 29 2024

உங்களுக்கு கட்ட பஞ்சாயத்து பழக்கம் ஆயிடுச்சா?- கடைசி எச்சரிக்கை இது தான்- விக்ரமன் மற்றும் அசீமுக்கிடையில் வெடித்த மோதல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. அந்த வாரம் 75ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம். அதாவது இந்த வாரம் முதலில் பிபி ஆரம்ப பள்ளி டாஸ் கொடுக்கப்பட்டது. அதன் நடுவே போட்டியாளர்களுக்கு கடிதம் எழுதும் டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவருமே எமோசனலாக, ரசிகர்களும் கண் கலங்கினர். இந்நிலையில் தற்போது ஆரம்ப பள்ளி, இந்திரன் சந்திரன் கலைக் கல்லூரியாக மாறியுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் ரெட்ரோ ஸ்டைலில் காஸ்ட்யூம் அணிந்து கல்லூரி சென்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்தே ராங்கிங் டாஸ்க் ஒன்று தான் 75ம் வாரத்தில் நடந்தது.இந்த டாஸ்க்கில் 1 முதல் 10 வரையிலான நம்பர்கள் வைக்கப்பட்டு யார் எந்த இடத்திற்கு தகுதியானவர்கள் என்ற போட்டி வைக்கப்பட்டது. இதில் அசீம் தான் முதலிடத்தில் வந்து நின்றார். மற்ற போட்டியாளர்கள் ஒவ்வொரு எண்ணிலும் நின்றனர்.


இதில் அசீம் நிற்கும் 1வது இடம் தனக்கு வேண்டும்  என்று அசீமுடன் விக்ரமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது அமுதாவணனிடம் அசிம் சண்டை போட்டது பற்றி விக்ரமன் பேச முயல, "உங்களுக்கு கட்ட பஞ்சாயத்து பழக்கம் ஆயிடுச்சா?. அமுதவாணன பேசுறது என் விருப்பம்" என அசீம் முறையிடுகிறார்.


தொடர்ந்து பேசும் விக்ரமன், "விளையாட்டுங்குறது விளையாட்டு தான். ஆனா அந்த விளையாட்டுக்காக தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைப்படுத்துறததோ, அவமானப்படுத்துறது" என விக்ரமன் பேசி கொண்டிருக்க, பஞ்சாயத்து செய்வதாக அசீம் கூறுகிறார்.இதன் பின்னர் பேசும் விக்ரமன், "உங்களுக்கு சொல்லக் கூடிய இறுதி எச்சரிக்கை. ஏன்னா மக்கள் பாத்துட்டு இருக்காங்க." என கூறுகிறார்.

அசீம் கூறியது கடுப்பானாலும் விக்ரமன் தனது கோபத்தையும் நியாயத்தையும் கை விடாது பேசிட்டு இருந்தார். விக்ரமனுக்கு ஆதரவாக ஷிவினும் பேசினார். ஆனால் அசீம் ஷிவினையும் வெளுத்து வாங்கினார். இதனால் அசீமின் இடத்தை பிடிக்க இருவராலும் முடியவில்லை.


அந்த வகையில் முதல் இடத்தில் அசீம் இரண்டாம் இடத்தில் அமுதவாணன் மூன்றாம் இடத்தில் தனலக்ஷ்மியும் நான்காவது இடத்தில் ஏடிகேவும் ஜந்தாவது இடத்தில் மணிகண்டனும் ஆறாவது இடத்தில் ரச்சிதாவும் ஏழாவது இடத்தில் மைனா நந்தினியும் எட்டாவது இடத்தில் கதிரவனும் ஒன்பதாவது இடத்தில் ஷிவினும் பத்தாவது இடத்தில் விக்ரமனும் நின்றார்கள். இந்த டாஸ்க் முடிவடைந்ததைத் தொடர்ந்து அசீம் சூப்பராக விளையாடியதாக ஷிவின் பாராட்டினார். இதனால் இப்போ தானே சண்டை போட்டீங்க அதுக்குள்ள சேர்ந்திட்டீங்களா என்று தனலக்ஷ்மி புலம்பிட்டு இருந்தார்.இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்தது.

Advertisement

Advertisement

Advertisement