• Apr 25 2024

என்னது மறுபடியும் சேரப்போறாங்களா...தனுஷ் ரசிகர்களுக்கு வெளியாக இருக்கும் குட் நியூஸ்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ், விரைவில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சொல்ல உள்ளாராம் என தகவல் தீயாய் பரவி வருகின்றது.

நடிகர் தனுஷ், தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து பான் இந்தியா நடிகராக உயர்ந்துவிட்டார்.அத்தோடு  இவர் அண்மையில் வாத்தி என்கிற படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். அங்கு வாத்தி படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. வாத்தி திரைப்படம் ஒரே மாதத்தில் ரூ.118 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை நிகழ்த்தியது. நடிகர் தனுஷின் கெரியரிலேயே அதிக வசூல் செய்த படமாக இது மாறியது.

வாத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.அத்தோடு  ராக்கி, சாணிக் காயிதம் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இப்படத்தையும் இயக்கி வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தனது 50-வது படத்தை தனுஷே இயக்கி நடிக்க உள்ளார்.

இவ்வாறுஇருக்கையில், நடிகர் தனுஷ் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அதன்படி பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் தனுஷ் நடிக்க உள்ளாராம். அத்தோடு இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய கர்ணன் திரைப்படம் வேறலெவலில் வெற்றியடைந்த நிலையில், அவர்கள் இருவரும் தற்போது மீண்டும் இணைய உள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது வாழை என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. அத்தோடு  இவர் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த மாமன்னன் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதுதவிர விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்க உள்ள படத்தையும் இயக்க உள்ளார் மாரி செல்வராஜ். மேலும் இந்த படங்களையெல்லாம் முடித்த பின்னரே அவர் தனுஷ் உடன் கூட்டணி அமைப்பார் என சொல்லப்படுகிறது. கர்ணன் பட மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement