• Mar 29 2024

ஆதியின் திருட்டுத் தனம் அனைத்தையும் கண்டு பிடித்த ஜெசி- செந்திலை வைத்து அர்ச்சனா போட்ட மாஸ்டர் பிளான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சரவணன் சந்தியாவுக்கு போன் போட அப்போது சந்தியாவின் குரல் சோகமாக இருப்பதால் என்ன ஆச்சு என கேட்கிறார். எங்க கேம்பில் யாரை நம்புவது யாரை நம்ப கூடாதுன்னு தெரியல ஒரே குழப்பமா இருக்கு என சொல்ல சரவணன் எதையும் தெளிவா முடிவெடுக்கிற உங்களுக்கு இப்படி நான் அதை நினைத்து ஆச்சரியப்படுவதா இல்ல வருத்தப்படுவதா தெரியல, பொறுமையா யோசிச்சு முடிவு பண்ணுங்க என சரவணன் அறிவுரை கூறுகிறார்.

அதன் பிறகு செந்தில் பரந்தாமனை சந்திக்க போக அப்போது அவனிடம் பரந்தாமன் டோக்கன்களை கொடுத்து நமக்கு ஓட்டு போட்டுட்டு வந்து இந்த டோக்கனை கொடுத்தா அவங்களுக்கு ஆயிரம் ரூபாய் இந்த டோக்கனை எல்லோரிடமும் பத்திரமா கொண்டு போய் சேர்க்க வேண்டியது உன்னோட வேலை எனக்கு சொல்லி பத்திரத்தில் கையெழுத்து வாங்குகிறார்.


அதன் பிறகு செந்தில் வீட்டுக்கு வந்து அந்த பேக்கை உள்ளே வைக்க அதை பார்த்த அர்ச்சனா என்ன என்று கேட்க டோக்கன் என சொல்லி செந்தில் காட்ட இதுல இருக்கிற டோக்கனை மட்டும் கொடுத்து விட்டு பணத்தை வாங்கிடலாம் என சொல்ல செந்தில் அர்ச்சனாவை திட்டுகிறார். நீங்க மட்டும் ஜெயிச்சிடுங்க அதுக்கப்புறம் இந்த அர்ச்சனா பண்ண போற வேலையை மட்டும் பாருங்க என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்.

அடுத்து ஜெஸ்ஸி கடையில் இருக்க அப்போது போலீஸ் வந்து இன்னும் இரண்டு நாளில் காணாமல் போன நகையை எடுத்து வந்து கொடுக்க வேண்டும், இல்லையென்றால் உன் மேல ஆக்சன் எடுக்க வேண்டியது இருக்கும் என மிரட்டி செல்கின்றனர்.மேலும் ஆதி ஏன் இந்த நகையை எடுத்து இருக்க கூடாது என ஜெசிக்கு சந்தேகம் வருகிறது. அடுத்து ஜெஸ்ஸியின் அப்பா அம்மா கடைக்கு வர அவர்கள் ஆதி வந்து பணம் வாங்கி சென்ற விஷயத்தை சொல்ல ஜெசி நான்தான் வாங்க சொன்னதாக சொல்லி சமாளித்து விடுகிறார்.


பிறகு சந்தியா சிவகாமியிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்க திடீரென ஏதோ சத்தம் கேட்க சந்தியா யாருன்னு தேட மறுப்பக்கம் செல்வம் பையாஸ்கோப் வழியாக பார்த்து சந்தியா இருப்பதால் கௌரி மேடமை இன்னைக்கு கடத்த வேண்டாம் என முடிவு செய்து அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதன்பிறகு ஜெசி வேகமாக வீட்டுக்கு வந்து பீரோவை எடுத்து நகை இருக்கா என தேட அப்போது ஆதியின் பேக்கைக்குள் பணக்கட்டுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைய இது எங்க அப்பா அம்மா கிட்ட வாங்கின பணம் இல்லன்னு ஏன் வயித்துல இருக்க குழந்தை மேல சத்தியம் பண்ணு என கேட்க ஆதி திருதிருவன முழிக்கிறான்.சொந்த வீட்டிலேயே பணத்தை திருடினவன் தானே உனக்கு எப்படி சூடு சொரணை வெட்க மானம் எல்லாம் இருக்கும் என ஜெசி கிட்ட ஆதி பளாரென அறைகிறான். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement