• Apr 24 2024

திரையுலகில் மற்றொரு சோகம்..!பிரபல இயக்குநர் திடீர் மரணம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தன்னுடைய சிறுவயதில் இருந்தே சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதுவதன் மூலம் எழுத்தாளராக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தவர் தான் ஷண்முகப்பிரியன்.

இவர் எழுதிய “விளிம்பு” எனும் நாடகமே அவர் இயக்கத்தில் “உறவாடும் நெஞ்சம்”என்ற திரைப்படமாக 1976ல் உருப்பெற்றது.இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சிவகுமார் சிறந்த நடிகருக்காக மாநில விருது பெற்றார்.


அதே போல் இயக்குநர் ஷண்முகப்பிரியன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி முதல் முதலில் இயக்கிய “ஒருவர் வாழும் ஆலயம்” எனும் திரைப்படம், 1980ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

திரைப்படங்கள் இயக்குவதை தாண்டி, வெற்றிவிழா, பிரம்மா, ஆத்மா போன்ற 50க்கும் மேற்பட்டத் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் ஷண்முகப்ரியன்.'ஒருவர் வாழும் ஆலயம்' படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.71 வயதாகும் இவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், இன்று காலமானார். இவரின் மறைவை தொடர்ந்து திரையுலகை சேர்ந்த பலர் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement

Advertisement