• Apr 20 2024

விமர்சனம் செய்தவர்களுக்கு விஜய் கொடுத்த மற்றுமோர் பதிலடி…வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் நாட்டையே கலக்கி கொண்டு இருக்கும் ஒருவரே நடிகர் விஜய். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கின்றார். அதில் ஏராளமான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. அதுமட்டுமன்றி பல விருதுகளையும் வென்று சாதனை படைத்திருக்கின்றார்.

இவ்வாறு எப்போதுமே சினிமாவில் பிஸியான முன்னணி ஹீரோவாக இருந்து வரும் இவர் தற்போது 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் நான்காம் கட்டப் படப்பிடிப்புக்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் வெளியான நேரத்தில் மதம் சார்ந்த பல சர்ச்சைகளும், விமர்சனங்களும் தனிப்பட்ட முறையில் பலவந்தமாக விஜய்யின் மேல் கூறப்பட்டது. அதாவது விஜய்யின் அப்பா இந்து சமயத்தை சேர்ந்தவர். அம்மா கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர். எனினும் விஜய்யும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருவதாகவும், இந்து சமயத்தை புறக்கணிப்பதாகவும் பல சர்ச்சைகள் இவர் மேல் எழுந்திருந்தன.

அவ்வாறான சர்ச்சைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சில மாதங்களுக்கு முன் 'பீஸ்ட்' படத்திற்காக அவர் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் "இயேசு, பிள்ளையார், ஹல்லா என மூவரையும் நான் வணங்குவேன்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் சமயத்தின் பேரில் அவரை விமர்சனம் செய்த பலருக்கும் சரியான பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு விடயத்தை செய்திருக்கின்றார் விஜய். அதாவது அவர் தற்போது தனது வீட்டின் வாசலில் பிள்ளையார் மற்றும் அம்மன் சிலைகளை வைத்துள்ளார்.

இதனைப் பார்த்த விஜய்யின் ரசிகர்கள் பலரும் அதனைப் புகைப்படம் எடுத்து, அப்புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement