• Apr 20 2024

அதிர்ச்சி.. திரையுலகில் மற்றுமோர் உயிரிழப்பு.. முக்கிய பிரபலம் திடீர் மரணம்.. கடும் சோகத்தில் ரசிகர்கள்.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகைப் பொறுத்தவரையில் சமீபகாலமாக தொடர் மரணங்கள் இடம்பெற்று வருகின்றன. ஒவ்வொருவருடைய இழப்பும் பேரிழப்பாகவே மாறி இருக்கின்றது. அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த மயில்சாமியின் மரணம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவருவதற்கு முன்பாகவே தற்போது மலையாள சினிமாவிலும் ஓர் மரணம் இடம்பெற்றுள்ளது. அதாவது பிரபல இயக்குநரான மனு ஜேம்ஸ் இன்று 31ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.


இவர் 2004-ஆம் ஆண்டு வெளியான ‘ஐ ஆம் க்யூரியஸ்’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் வளர்ந்ததும் மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். 


இவர் தற்போது தனது கனவுப்படமான ‘நான்சி ராணி’ என்ற படத்தை இயக்கி வருகின்றார். இப்படமானது இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இருப்பினும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.


இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்பாகவே அபபடத்தின் இயக்குநர் மனு ஜேம்ஸ் மரணமடைந்துள்ளார். அதாவது அவர் ஆலுவாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மஞ்சள் காமாலைக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


இவரின் திடீர் மறைவானது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. இவரின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உட்படப் பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement