• Apr 25 2024

தனுஷின் D50 படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த அறிவிப்புகள்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

தனுஷ் தற்போது அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றார். மேலும் இப்படத்திற்காக தன் கெட்டப்பை முழுவதுமாக மாற்றி வேறொரு ஆளாக காட்சியளிக்கின்றார் தனுஷ்.

அதிரடியான ஆக்ஷன் படமாக மட்டும் கேப்டன் மில்லர் இல்லாமல் பீரியட் படமாகவும் உருவாகி வருகின்றது.அத்தோடு மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகிவரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இதையடுத்து கேப்டன் மில்லர் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகின்றது. இவ்வாறுஇருக்கையில்  கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் தன் ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார்.

பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராகவும் வெற்றிகண்ட தனுஷ் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகும் இப்படம் தனுஷின் திரைப்பயணத்திலேயே மிக முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ்.ஜெ சூர்யா நடிப்பதாக பேசப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து சந்தீப் கிஷன் மற்றும் விஷ்ணு விஷாலும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அத்தோடு சந்தீப் கிஷன் மற்றும் எஸ்.ஜெ சூர்யா இப்படத்தில் தனுஷிற்கு சகோதரர்களாக நடிப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது.

இவ்வாறுஇருக்கையில் வடசென்னையை மையப்படுத்தி இப்படம் உருவாக இருப்பதாக வந்த தகவலினால் இப்படமும் புதுப்பேட்டை படத்தை போல ஒரு மாஸான படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

தனுஷின் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பது இதுவே முதல்முறை என்பதால் இதுவும் இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இவ்வாறுஇருக்கையில்  இப்படத்தின் படப்பிடிப்பு கேப்டன் மில்லர் படம் முடிந்தவுடன் துவங்குமாம். எனவே இவ்வாறு பல சிறப்பான விஷயங்கள் இடம்பெற்றிருக்கும் இப்படத்தை காண தற்போதே ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement