விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 5 இல் கலந்த கொண்ட பிரபல்யமானவர் தான் அனிதா சம்பத், இவர் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்ற முதல் சன் டிவியில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பதும் முக்கியமாகும்.
இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.பிக் பாஸில் எதற்கெடுத்தாலும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார். இருப்பினும் டாஸ்க்குகளில் நேர்மையுடன் விளையாடி ஆதரவையும் பெற்றார்.
நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகி வெளியே வந்த அனிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன. ஒருபக்கம் கணவருடன் சேர்ந்து யூடியூப் சேனலில் பிஸியாக வீடியோக்களை வெளியிடுவார்.அதே போல் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 1ல் கலந்து கொண்டு கடுமையாக ஆடி டைட்டில் வின்னர் பட்டத்தை அடித்தார்.
இது தவிர நடிகர் விமல் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி செம்ம பிஸியாக வலம் வரும் அனிதா அடுத்து சீரியலிலும் நடிக்க தொடங்கி விட்டார். கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் மந்திர புன்னகை தொடரில் அனிதா ஹீரோயின் தோழியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
அதுவும் அவரின் சொந்த பெயரான அனிதாவாகவே இந்த சீரியலில் அனிதா சம்பத் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பலரின் வாழ்க்கையும் மாறி போனது. குறிப்பாக வனிதா விஜயகுமார். பிக் பாஸ் மூலம் அவருக்கு கிடைத்த ரீச் இன்று வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்குகிறார். அவருக்கு அடுத்தப்படியாக அனிதா சம்பத்தும் சீரியல், ரியாலிட்டி ஷோ என பிஸியாக வலம் வருகிறார்.இதனால் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!