• Apr 20 2024

ரஜினிகாந்தின் படத்திற்காக சம்பளத்தை உயர்த்திய அனிரூத்- தீவிர பேச்சுவார்த்தையில் இறங்கிய லைகா நிறுவனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகர் ரஜிகாந்த் நடிப்பில் ஜெயிலர் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை இயக்குநர் நெலசன் திலீப் குமார் இயக்கி வருவதோடு லைகா நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்து வருகின்றது.

பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை லைகா நிறுவனம் தான் தயாரித்து வருகின்றது. இந்த நிலையில் தற்பொழுது வெளியான தகவலின்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்களை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


 இது குறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் இசையமைக்க லைகா நிறுவனம் அனிரூத்தை அனுகிய போது, 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு ஷாக் கொடுத்துள்ளாராம்.

 தொடர்ந்து அவர் இசையமைக்கும் படங்கள் ஹிட் ஆகி வருவதால் அனிரூத் இப்படி சம்பளத்தை ஏற்றியுள்ளதாக தெரிகிறது. இது சம்மந்தமாக இப்போது லைகா நிறுவனம் அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement