• Apr 25 2024

5-கோடி சம்பளம் கேட்ட அனிருத்...களற்றி விட்ட லைக்கா..ரகுமானுக்கு அடித்தது அதிஷ்டம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அனிருத் ரவிச்சந்திரன் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். மேலும் இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார்.


மேலும் இவர் இசையமைத்த முதல் திரைப்படம் தனுஷின் 3 திரைப்படம் ஆகும். மேலும் இந்த 3 திரைப்படத்தில் "வொய் திஸ் கொலவெறி டி" என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். 


மேலும் இவரது இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த இவர், தற்போது வேறு படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.


இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜனியை வைத்து, அடுத்த 2 படங்களை தயாரிக்க உள்ளது லைக்கா நிறுவனம். இந்த 2 படங்களுக்கும் இசை அமைத்து தரவேண்டும் என்று லைக்கா அனிருத்தை அணுகியுள்ளது.


தற்போது லைக்கா நிறுவனம் என்ற உடனே சம்பளத்தை கூட்டி, 5 கோடி கேட்டுள்ளார். 2 படங்களுக்கும் சேர்த்து 10 கோடி தருமாறு கேட்டுள்ளார் அனிருத்.ஒதுங்கிய லைக்கா, தாம் தயாரிக்க உள்ள 2 படங்களுக்கும், இசைப் புயல் ஆற்.ரகுமானை ஒப்பந்தம் செய்து விட்டார்களாம்.

Advertisement

Advertisement

Advertisement