• Apr 23 2024

ரஜினியின் புதிய படத்திற்குப் பல கோடி ரூபாய் சம்பளம் கேட்ட அனிருத்... உடனே தயாரிப்பு நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே தன்னுடைய இசையால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர் அனிருத். இவர் இளம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் '3' என்ற படம் மூலம் அறிமுகமானவர். இப்படத்தை தொடர்ந்து அனிருத் கமிட்டான பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட் ஆகி சாதனை படைத்தன.


அந்தவகையில் இந்த வருடத்தில் மட்டும் அனிருத் இசையமைப்பில் 'பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம், திருச்சிற்றம்பலம்' போன்ற பட பாடல்கள் வெளியாகி அதிரடி காட்டியுள்ளன. இதில் அனைத்து பாடல்களுக்குமே நல்ல வரவேற்பு மக்கள் கொடுத்து சிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் இணைந்து இரண்டு படங்கள் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளி வந்துவிட்டது. இந்த இரண்டு படங்களுக்குமே அனிருத்தை கமிட் செய்ய தயாரிப்பு குழு ஏற்கெனவே முடிவு செய்திருக்கிறார்கள்.


ஆனால் அனிருத் ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி சம்பளம் என 2 படத்திற்கும் மொத்தமாக ரூ. 10 கோடி கேட்டிருப்பதாகவும் இதனால் லைகா நிறுவனம் ஒரு படத்திற்கு ஏ.ஆர். ரகுமானை கமிட் செய்ய முடிவு செய்திருப்பதாக தற்போது சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement