• Mar 29 2024

யாரோ பின்னால் தட்டி விட்டுச் செல்வார்கள்... பாலியல் தொல்லை குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்த ஆன்ட்ரியா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆன்ட்ரியா. அதனைத் தொடர்ந்து இவர் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது இவர் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆன்ட்ரியா நடிகை மட்டுமல்லாது ஒரு பாடகியும் கூட. அந்தவகையில் இவர் பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த 'வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுகின்றார்.


இந்நிலையில் சமீபகாலமாகவே நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆன்ட்ரியாவும் தான் எதிர்கொண்ட கசப்பான பாலியல் தொல்லை குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ''சமூகத்தில் நிறைய பெண்களுக்கு பாலியல் பலாத்காரம் தொடர்பான பல கொடுமைகள் நடக்கின்றன. சில சமயங்களில் நானும் என்னுடைய வாழ்வில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டு இருக்கிறேன். குறிப்பாக தெருவில் நடந்து போகும்போது யாரோ பின்னால் வந்து என்னை தட்டி விட்டு செல்வார்கள்" எனக் கூறியிருக்கின்றார்.


மேலும் "சில நேரம் அவர்கள் எல்லை மீறுவார்கள். கலைநிகழ்ச்சிகளிலும் இவை நடக்கும். ஆனாலும் நாம் அதை உணர்வதற்குள் அவர்கள் அங்கிருந்து நகர்ந்து விடுவார்கள். ஒரு சில சமயத்தில் ஆண்கள் எல்லாருமே இப்படிதான் நடந்து கொள்வார்களா? என்று படுமோசமாக நினைக்க வைத்து விடுகிறார்கள்.

இது சாதாரணமான விஷயம் இல்லை. பலரும் பாலியல் வன்கொடுமை நடக்கும்போது தான் பதறுகிறார்கள். ஆரம்பத்திலேயே இதனைக் கண்டித்தால் எல்லை மீறல்கள் இருக்காது" எனவும் வெளிப்படையாக கூறி உள்ளார் ஆன்ட்ரியா.

Advertisement

Advertisement

Advertisement