இளம் நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 21ம் திகதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வுரும் திரைப்படம் தான் பிரின்ஸ்’. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் குமார் இயக்கியிருந்தார். அத்தோடு மிகுந்த எதிர்பார்ப்பில் இப்படம் வெளியாகியது.
மேலும் இப்படம் வெளியாகி முதல்நாளில் இந்த படம் சுமார் 7 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி நாளான திங்கள் கிழமை இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என கூறப்பட்டது. ஆனாலும் விடுமுறை நாட்களில் கூட இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை வாங்கிய அன்புச்செழியனுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்றால் தெலுங்கில் இந்த படம் சுத்தமாக படுத்துவிட்டதாம். ரிலீஸாகி நான்கு நாட்களில் வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம்.
இதனால் படக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனராம்.மிகுந்த வசூல் பெறும் என்ற எதிர்பார்த்த இடத்திலேயே மண்ணைக் கவ்வியது இயக்குநருக்கு சற்று ஏமாற்றமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!