பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாணிற்கு ஜோடியாக 'புலி' படத்தில் நடித்து திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிகிஷா படேல். இவர் தமிழில் 'தலைவன், என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நிகிஷா படேல் பிரபுதேவாவை திருமணம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவி இருந்தன.பின்னர் அதில் உண்மை இல்லை என்று மறுத்தார்.
இந்த நிலையில் நிகிஷா படேல் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.
அதை பார்த்த பலரும் படத்தில் இருக்கும் வெளிநாட்டவரை நிகிஷா படேல் காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பரபரப்பாக பேசினர். சமூக வலைத்தளத்திலும் இந்த திருமண தகவல் குறித்த செய்திகள் வைரலானது.
இதற்கு நிகிஷா படேல் தற்போது விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். அதாவது அவர் கூறும்போது, ''இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தில் என்னுடன் இருப்பவரை நான் திருமணம் செய்யவில்லை. திருமணம் குறித்து வெளியான தகவல்களில் உண்மை இல்லை" என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.
Listen News!