• Apr 25 2024

அதிகபட்ச பணத்தொகையுடன் சென்ற அமுதவாணன்.. எடுத்துச் சென்றதை விட.. கொடுத்தது அதிகமாக இருக்கே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல விஜய் தொலைக்காட்சி சேனலில் 6 ஆண்டுகளாக உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ஒரு ஹிட் நிகழ்ச்சியே பிக்பாஸ். இந்நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் இதன் 6ஆவது சீசனானது 2022 அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. இதில் இறுதிப் போட்டியாளர்களாக விக்ரமன், அசீம், மைனா, கதிரவன், ஷிவின், அமுதவாணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். 


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கதிரவன் 3 லட்சம் பணப்பையை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியதுடன் 23லட்சம் சம்பளமாக பெற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை பிக்பாஸ் 13 லட்சம் மதிப்பில் பணப்பெட்டி ஒன்றை வைத்திருந்தார். 


அப்பெட்டியை யார் எடுப்பார்கள் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் அப்பெட்டியை முதல் இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்ட அமுதவாணன் எடுத்துச் சென்றுள்ளார். அந்தவகையில் அமுதவாணனுக்கு சம்பளமாக குறைந்த பட்சம் 23 ஆயிரம் அல்லது அதிகபட்சம் 27 ஆயிரமாக ஒரு நாள் சம்பளமாக பேசப்பட்டது. 


அப்படிப் பார்த்தால் 23 லட்சம் சம்பளமாக குறைந்தபட்ச சம்பளத்தோடு 13 லட்சம் பணப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு 40 லட்சத்தோடு வெளியேறி இருக்கிறார் அமுதவாணன். இதனை அறிந்த ரசிகர்கள் எடுத்ததை விட கொடுத்த சம்பளம் அதிகமாக இருக்கின்றதே எனக் கூறி வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement