• Apr 20 2024

சாமத்தில் பிரியாணி அனுப்பி வைத்த பிக்பாஸ்... யாருக்கும் தெரியாமல் ஒழித்து வைத்த அமுதவாணன் டீம்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் எப்போதுமே ஏதாவது ஒன்று குறும்புத்தனமாக நடந்த வண்ணம் தான் இருக்கும். அந்தவகையில் இன்று காலையிலேயே எழுந்துவிட்ட அமுதவாணன், ரச்சிதா, ராபர்ட் மாஸ்டர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் காலை உணவை அனைவருக்கும் தயாரித்து விட்டு ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். 

அந்த சமயத்தில் ஸ்டோர் ரூம் பெல் அடிக்க பேட்டரி மாற்ற கூப்பிடுகிறார்கள் என்று நினைத்து ரச்சிதா உள்ளே சென்று திறந்து பார்த்தார். அங்கு அவருக்கு எதிர்பாராத வண்ணம் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வரிசையாக பிரியாணி, சிக்கன் 65, ரசகுல்லா என அறுசுவை உணவு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.


இதனைப் பார்த்த ரச்சிதா உடனே குதித்து சந்தோஷப்பட்டார். உடனடியாக வெளியே ஓடிவந்து மாஸ்டரையும், அமுதவாணனையும் சத்தம் போட்டு சந்தோசத்தில் அழைத்தார்.

அவர்கள் என்னவோ ஏதோ என்று பதறி அடித்துக் கொண்டு உள்ளே ஓடி வந்தனர். உள்ளே வந்து பார்த்த அவர்களுக்கும் அந்த அதிர்ச்சி கலந்த சந்தோஷம். உடனடியாக மூவரும் சேர்ந்து திட்டம் தீட்டி இதை எடுத்து யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்தனர்.

அந்தவகையில் உடனடியாக சமையல் கபோர்ட்டில் அனைத்தையும் ஒளித்து வைத்தனர். அப்போது கண்விழித்த ராம்குமார் இதைப்பற்றி அறியாமல் தூக்க கலக்கத்தில் ஒன்றும் தெரியாமல் அமர்ந்திருந்தார்.

இருப்பினும் கதிரவன் சமையலறை பக்கம் வந்த பொழுது அவசர அவசரமாக அந்த உணவை ஒளித்து வைத்தனர் மூவரும். உடனே ஏன் ஸ்டோர் ரூமின் பெல் அடித்தது என்று கதிரவன் கேட்க பேட்டரி மாத்த என்று கூறி அவரை உள்ளே அனுப்பி வைத்தனர். 

கதிரவனிடம் உள்ளே சென்ற ரச்சிதா அவரிடம் ஆர்வம் மிகுதியில் பிரியாணி வந்த விஷயத்தை உடனே சொல்லி, யாருக்கும் வெளிய சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். கதிரவன் அதற்கு ஜாலியாக ஒப்புக்கொண்டு கேமராவை பார்த்து நேற்று எல்லாம் அமுது அழுது கொண்டிருந்தார் இன்று சந்தோஷமாக இருக்கிறார் என்று கிண்டலாக கையை உயர்த்தி காட்டினார்.

நான்கு பேருக்கு மட்டுமே இந்த பிரியாணி உண்மை தெரிந்த நிலையில் அவர்கள் சென்றுவிட, கொஞ்ச நேரம் பொறுத்து அங்கு வந்த மைனா காபி பொடி எடுக்க கப்போர்டை திறந்த போது பிரியாணி உள்ளிட்டவற்றை பார்த்துவிட்டு அசீமை கூப்பிட்டு காண்பிக்க அசீம், மணிகண்டன் அதை பார்த்துவிட்டு உடனே "இது அமுதவாணன் டீம் வேலையா? நாமும் தெரியாதது போல் இருந்து விடுவோம்" என்று சொல்லி அவர்கள் தெரியாதது போல் நடந்து கொண்டார்கள். 


பின்னர் "அமுதவாணன் என்ன மணி என்று என்னை சந்தோஷமாக அழைத்ததை வைத்து மணிகண்டன் அப்போதே எனக்கு சந்தேகமாக இருந்தது" என்று சொல்லி கொண்டிருந்தார். சஸ்பென்ஸை தெரிந்துகொண்ட மைனா, அசீம், மணிகண்டன் தங்களுக்கும் எதுவும் தெரியாதது போல் ராபர்ட் மாஸ்டரிடம் பேசிக்கொண்டிருந்தனர். 


அதிலும் குறிப்பாக "இந்த மழைக்கு சிக்கன், பஜ்ஜி , போண்டா இருந்தால் நல்லா இருக்கும் இல்ல மாஸ்டர்" என ராபர்ட்டை பார்த்து கேட்க அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்தார். ஆனால் இது எதையுமே அறியாத மற்றவர்கள் இரண்டு மணி வரை உறங்கிக் கொண்டிருந்ததை நாம் காண முடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement