• Mar 29 2024

அமிர்தா வீட்டிலிருந்து விரட்டப்பட்ட எழில்- அடிக்கப் பாயும் ஈஸ்வரி.. வீட்டை விட்டு வெளியேறும் இனியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வரும் இனியாவிடம் என்னாச்சு என் டல்லா இருக்கு என எல்லோரும் கேட்டுக்க அதை எதையோ சொல்லி சமாளித்து விடுகிறார். அடுத்து அமிர்தா வீட்டில் சோகமாக உட்கார்ந்து இருக்க அனைவரும் வீட்டிற்கு வர பதறிப் போகிறார். என்னாச்சுங்க ஏன் டல்லா இருக்கீங்க அந்த நேரத்தில் அமிர்தாவின் அம்மா வர அமிர்தா எழிலின் கையை தள்ளி விடுகிறார்.

அடுத்து அமிர்தாவின் அம்மாவும் அப்பாவும் வீட்டில் பேசினியா பெரியவங்கள வந்து பேச சொல்லு அதுவரைக்கும் இங்கு வராத, அதுதான் நல்லது என சொல்ல எழில் உங்களுக்கு என் மேல நம்பிக்கை குறைந்து போயிடுச்சு அப்படி நான் என்ன பண்ணுனேன்னு தெரியல. நீங்க சொன்ன மாதிரி செஞ்சிட்டு நான் இந்த வீட்டுக்கு வரேன் என கண்ணீருடன் எழும்பி வெளியே வந்து விட அமிர்தா ரூமுக்கு சென்ற கண் கலங்கி அழுகிறார்.


பின்னர் செழியன் ஜெனிக்கு ஆப்பிள் கட் செய்து கொடுத்து கொண்டிருக்க அப்போது இது அப்பா வாங்கி கொடுத்தது என சொன்னதும் ஜெனி வாயிலிருந்து கீழே தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார். விஷயம் அறிந்து ஈஸ்வரி மற்றும் பாக்கியா என இருவரும் கோபப்படுகின்றனர். ஒரு கட்டத்தில் ஈஸ்வரி அந்த ஆப்பிள்களை கொண்டு போய் குப்பை தொட்டியில் கொட்டுகிறார்.

அடுத்து இனியா எழில் ஈஸ்வரி தாத்தா என எல்லோரும் தனித்தனியாக நீங்க நாளைக்கு என் கூட ஸ்கூலுக்கு வரீங்களா என கேட்க எல்லோரும் ஏன் எதுக்கு என கேள்வி கேட்க என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார். பிறகு பாக்கியாவிடம் சென்று ஸ்கூல்ல போன் யூஸ் பண்ணா தப்பா எனக்கு கேட்க தப்புதான் என கொதிக்கிறார். இதனால் இனியா நடந்த விஷயத்தை சொல்லாமல் மூடி மறைத்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.


அடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் இனியா ஸ்கூலுக்கு பேரன்ஸ் கூட்டிட்டு வரணும் இல்லனா டிசி வாங்கிக்க சொல்றாங்க என சொல்ல ஈஸ்வரி இனியாவை அடிக்கப் பாய எல்லோரும் சேர்ந்து என்னை அடிக்கறீங்க நான் எங்கேயாவது போறேன் என வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார். அந்த நேரத்தில் கோபி வர கோபியிடம் எல்லோரும் என்னை அடிக்கிறாங்க என கூறுகிறாள்.

Advertisement

Advertisement

Advertisement