தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5இன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரி கொடுத்த சக போட்டியாளரான அமீரை காதலித்தார்.
அதன் பின்னர் இவர்கள் இருவரும் காதல் தொடர்பில் இருந்து விரைவில் திருமணமும் செய்யவுள்ளனர். இருப்பினும் ரகசியமாக இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருவதாகவும் சமீபத்தில் ஒரு சில செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் தற்போது பாவனியின் மறைந்த முதல் கணவருடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் பாவனி தெலுங்கு நடிகர் பிரதீப் என்பவரை திருமணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ஒரு சில பிரச்சனையால் கணவர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த பாவனி தற்போது அமீரை காதலித்து திருமணமும் செய்யவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!