ஆல்யா மானசா விஜய் டிவி சின்னத்திரை நடிகை மற்றும் வடிவழகி ஆவார். மேலும் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில்ஒளிபரப்பான “ராஜா ராணி” என்னும் சின்னத்திரை தொடரில் நடித்து திரையுலகில் ஒரு நடிகையாக அறிமுகமானவர்.
அதன் பிறகு 'ராஜா ராணி'இல் தன்னுடன் சேர்ந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் ராஜா ராணி 2 சீரியலில், நடித்துக் கொண்டிருந்தபோது ஆல்யா மானசா கர்ப்பமானார். பிரசவம் காரணமாக விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறினார்.
அதுமட்டுமல்லாமல் ஆல்யா மானசா தற்போது சன்டிவியின் புதிய சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தம்பதிக்கு முதலில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதன் பிறகு சீரியலில் இருந்து விலகிய ஆல்யாவுக்கு அடுத்த சில நாட்களில் ஆண்குழந்தை பிறந்தது.
தற்போது தனது மகளுடன் நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆல்யா மானசா.
Listen News!