2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பாவாக அறிமுகமானார். இந்த சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக் நடித்தார். சீரியலில் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
பின்னர் இந்த காதல் ஜோடி திருமணமும் செய்துக்கொண்டனர். முதல் குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசா உடல் எடையை குறைத்து ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக என்ட்ரி கொடுத்தார்.ராஜா ராணி பாகம் ஒன்றிற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.
ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருந்த நேரத்தில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமானார்.9 மாதங்கள் வரை சீரியலில் நடித்த ஆல்யா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.ஆல்யா - சஞ்சீவ் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆன நிலையில் ஆல்யா மானசா உடல் எடையை குறைத்து மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது கார்த்திக் ராஜாவுடன் இணைந்து புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் என்று தெரியவில்லை என்பதும் முக்கியமாகும். மேலும் கார்த்திக் ராஜா ஷு தமிழில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக கூறியிருந்தார்.
இதனால் ஆல்யா விஜய் டிவியை விட்டு ஷு தமிழுக்கு போகப் போகின்றாரா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் குறிப்பிடத்தக்கது.
Listen News!