• Apr 20 2024

புஷ்பா-2 படத்தில் நீங்க வில்லனாக நடித்தால் நல்லா இருக்கும்- பிரபல நடிகரை கெஞ்சி கேட்கும் அல்லு அர்ஜுன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ,கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகியது தான் புஷ்பா. இப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கியிருந்ததோடு இப்படம் கடந்த டிசம்பர் மாதம் 18ம் திகதி உலகம் முழுவதும் வெளியாகியிருந்தது.

இப்படத்தில் கதாநாயகனாக அல்லு அர்ஜுன் நடித்திருந்ததோடு ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். சமந்தா இப்படத்தில் ஓர் பாடலுக்கு நடனமாடி அசத்தியிருப்பார். இப்படம் வசூலிலும் அள்ளிக் குவித்தது.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா the Rule உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயலும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லுவதாக இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்பட்டது.

இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூலையில் ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் முதல் படத்தின் பட்ஜெட்(ரூ.150) ஐ விட சுமார் ரூ.250 கோடி அதிகமாக அதாவது ரூ.400 கோடியில் இப்படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட உள்ளது.

இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் சுகுமார் ஈடுபட்டுள்ள நிலையில், இப்படத்தின் முதல்பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க கேட்டிருப்பதாகவும் ஆனால் அவர் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்கவில்லை எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், புஷ்பா-2 படத்தில் விஜய்சேதுபதி ஒரு போலீஸ் உயர் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்கவைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஜய்சேதுபதியை நடிக்கவைக்க அல்லு அர்ஜூன் சிபாரிசு செய்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் முதல் பாகத்தில் ஓ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடியதைப் போல் சமந்தாவை 2 ஆம் பாகத்தில் ஆடுகிறார் எனக் கூறப்படுவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement