• Mar 28 2024

சிவகார்த்திகேயன் மீது விஷத்தைக் கக்க நினைக்கும் கும்பல்... எல்லாம் அந்த ஒரு விஷயத்தை தடுப்பதற்குத் தானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து பல கோடி மக்களின் மனங்களை வென்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நகைச்சுவை கலந்த பேச்சிற்கும், திறமையான நடிப்பிற்கும் மயங்காதவர்கள் இல்லை என்று கூறலாம்.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அஜித், விஜய்க்கு அடுத்த படியாக மார்க்கெட்டில் அதிக வசூல் சாதனையை படைத்து வருபவர் என்றால் அது நம்ம சிவகார்த்திகேயன் தான்.


அந்தவகையில் டாக்டர், டான் என தொடர்ந்து ரூ. 100 கோடி வசூல் செய்த இரண்டு படங்களை கொடுத்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது சமீபத்தில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் கூட சில நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றாலும், தயாரிப்பாளருக்கு அப்படம் பல கோடி லாபத்தை அள்ளி கொடுத்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் 'மாவீரன்'. இப்படத்தின் படப்பிடிப்பானது நிறுத்தப்பட்டுள்ளதாக சமீபகாலமாக கூறி வருகின்றனர்.

அதாவது சிவகார்த்திகேயனுக்கும், இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாட்டின் காரணமாக படப்பிடிப்பு நின்றுபோய் விட்டதாக சமூக வலைத்தளங்களில் வீண் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.


இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது அப்படி எதுவும் நடக்கவில்லை. சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காமல் அவர் மீது பொறாமை கொண்ட சில கும்பல் அவரின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே இப்படியான விஷ வன்மத்தை கக்கி வருகிறார்கள். அதுமட்டுமல்லாது பிரின்ஸ் திரைப்படம் வெளிவந்த முதல் ஷோவில் இருந்து இவ்வாறாக தவறான முறையில் விமர்சனத்தையும் பரப்பி வந்தார்கள். 

வாழ்க்கையில் நிறையத் தடைகளைத் தாண்டி ஒருவர் கஷ்டப்பட்டு மேலே வந்தால், இப்படி தான் தேவையில்லாத வன்மத்தை கக்கி கீழே இறக்க பார்க்கிறார்கள்.

ஆனால் எது எவ்வாறாயினும் என்ன நடந்தாலும் சிவகார்த்திகேயனின் பேரையும், புகழையும் அசைக்க முடியாத வகையில் ரசிகர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். மேலும் மாவீரன் படப்பிடிப்பு நின்று போய்விட்டதாக வெளியான தவறான செய்தியை கேட்டு யாரும் நம்ப வேண்டாம் எனவும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement