• Apr 19 2024

காதலிப்பதற்கு முதலே அதெல்லாம் நடந்திருச்சு அதனால பொறாமை இல்லை- குஷ்பு குறித்த ரகசியத்தை கூறிய சுந்தர்.சி

stella / 1 year ago

Advertisement

Listen News!

90களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு. இவர் தர்மத்தின் தலைவன் என்னும் படத்தின் மூலம் ஹுரோயினாக என்ட்ரி கொடுத்தார்.இதன் பின்னர் இவர் தேர்வு செய்து நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றன.

அந் வகையில் இவர் ரஜினி, கமல், பிரபு என அன்றைய காலகட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார். அதிலும் பிரபுவுடன் இவரது ஜோடி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்ததுடன் இவர்களை பக்கா ஜோடி என வர்ணித்தனர்


இதற்கிடையே கடந்த 2000 ஆண்டு இயக்குநர் சுந்தர் சியை காதல் திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் தற்டிபாழுதும் நடித்து வரும் குஷ்பு தற்போது வாரிசு படத்தின் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

 இந்நிலையில் அவரது கணவர் சுந்தர் சி ..குஷ்பூவிற்கு ரசிகர்கள் கட்டிய கோவில் குறித்து பேசி இருப்பது வைரல் ஆகி வருகிறது. பிரபல இயக்குநரான சுந்தர் சி தற்போது காபி வித் காதல் என்னும் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.  

இது குறித்தனா நேர்காணலில், குஷ்பு தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவது உங்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அதற்கு பதில் அளித்தவர் சுந்தர் சி.குஷ்புவை காதலிப்பதற்கு முன்னதாகவே இவை எல்லாம் நடந்து முடிந்து விட்டதாகவும் எனவே தான் எனக்கு பொறாமை எல்லாம் உருவாகவில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.









Advertisement

Advertisement

Advertisement