• Apr 24 2024

அதெல்லாம் பண்ணமுடியாது- படப்பிடிப்பிலிருந்து கோபமாகக் கிளம்பிய சரத்குமார்- அதிர்ச்சியில் உறைந்த ராகவா லாரன்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் இருந்து தற்பொழுது வரை நடித்து வரும் நடிகர் தான் சரத்குமார். இவர் நடிப்பில் வெளியாகிய சூரிய வம்சம், நட்புக்காக, நாட்டாமை என இன்னும் பல பெயர்கள் இவருக்கொரு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இதனை அடுத்து தற்பொழுது வில்லனாகவும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார். சமீபத்தில் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு தந்தையாக சரத்குமார் நடித்திருந்தார். மேலும் இவர் நடிப்பில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகவுள்ளது. 


தற்போது சரத்குமார், ராகவா லாரன்ஸ் 'ருத்ரன்' என்ற படத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங்கின் போது சரத்குமார், "இரவு 11 மணிக்கு மேல் என்னால் நடிக்க முடியாது" என்று ராகவா லாரன்ஸிடம் கூறியுள்ளார்.


ஆனால் படத்தின் குறிப்பிட்ட காட்சியை அமைக்க 11 மணிக்கும் மேல் ஆகியுள்ளது. இதனால் கோபம் அடைந்த சரத்குமார் யாரிடமும் சொல்லாமல் படப்பிடிப்பின் பாதியில் சென்றுவிட்டார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதை கேள்வி பட்ட லாரன்ஸும் கோபத்தில் வீட்டிற்கு சென்று விட்டதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.      

Advertisement

Advertisement

Advertisement