• Apr 18 2024

இரண்டாவது ஆண்குழந்தையை முதன் முதலில் ரசிகர்களுக்கு காட்டிய ஆலியா மானசா…வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் செம ஹிட்டாக ஓடி முடிந்த சீரியல் தான் ராஜா-ராணி.இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே பேராதரவு கிடைத்திருந்தது. அத்தோடு இதில் கதாநாயகனாக சஞ்சீவ்வும் கதாநாயகியாக ஆல்யா மானசாவும் நடித்திருந்தனர்.

மேலும் இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு மே 27 ஆம் திகதி காதலித்து திருமணம் செய்து கொண்டார்ள்.இவர்கள் இருவருக்கும் 2020 மார்ச் மாதம் அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

ஆல்யா மானாசா ராஜா ராணி சீசன்2 இல் நடித்து கொண்டிருந்த நிலையில் சஞ்சீவும் சன்டிவியல் ஒளிபரப்பாகுகின்ற கயல் நாடகத்தில் சைத்திராவிற்கு ஜோடியாக நடிக்கின்றார்.

இவர்கள் இருவருக்கும் ஐலா எனும் அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.இவ்வாறு இருக்கையில் மறுபடியும் ஆல்யா கர்ப்பமாகி இருந்த நிலையில் சீரியலில் இருந்து விலகி இருந்தார் ஆலயா மானசா.

இதன் பிறகு இரண்டாவதாக ஒரு ஆண்குழந்தையையும் பெற்றெடுத்தார்.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

தற்போது, முதல் முதல் முறையாக தங்களது இரண்டாவது குழந்தை அர்ஷ்யையும் வெளியுலகிற்கு காட்டியுள்ளனர். அந்த வீடியோவை அவர்கள் தங்கள் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்...

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement