• Mar 28 2024

லட்ஷ ரூபாயில் உடையணிந்து.. கோடி ரூபாயில் நெக்லஸ் அணிந்து.. விருது விழாவிற்கு சென்ற ஆலியா பட்.. வியந்து பார்த்த ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'ஜீ சினிமா விருதுகள்' கடந்த ஞாயிறு இரவு கண்ணை பறிக்கும் வகையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் அணிந்து வந்த ஆடைகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருந்தன. 


இந்நிலையில் இவர்கள் அனைவருக்கும் டஃப் கொடுக்கும் வகையில் ஆலியா பட் கவர்ச்சி சிலையாகவே வந்து கலக்கி விட்டார். அந்தவகையில் பெண் குழந்தயை பெற்றெடுத்து சமீபத்தில் தாயான ஆலியா பட் நீண்ட நாட்கள் பிரெக்னன்ஸி விடுமுறை எடுக்காமல் அதிரடியாக தனது அழகையும் சரி செய்து கொண்டு அம்மாவானாலும் ஹாட்னஸ் போகாது என வெளிப்படுத்தும் முகமாக அந்த நிகழ்ச்சியில் பலரது கண்களையும் வெகுவாக கவர்ந்தார்.


இந்நிகழ்வில் 'கங்குபாய் கத்தியவாடி' படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினை ஆலியா பட் வென்றார். அதுமட்டுமல்லாது இவர் நடிப்பில் வெளியான 'டார்லிங்ஸ்' மற்றும் 'பிரம்மாஸ்திரா' படங்களிற்காக ஏகப்பட்ட விருதுகளை வென்றிருந்தார். ஆலியா பட் வாங்கிய விருதுகளை விட அவர் அந்த விழாவில் அணிந்து வந்த ஆடை மற்றும் கழுத்தில் அணிந்திருந்த அந்த நெக்லஸ் தான் பலரது பார்வைகளையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் பச்சை நிற கவர்ச்சி கவுனில் விருது விழாவில் கலந்து கொண்டு அனைவரது தலையையும் தன் பக்கம் திருப்ப வைத்து ஆலியா பட் மாஸ் காட்டினார். மேலும் Costarellos எனும் பிரபல ஃபேஷன் நிறுவனத்திடம் இருந்து தான் இந்த உடை தயாரிக்கப்பட்டு ஆலியா பட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. 


இந்த உடையின் விலை மட்டும் € 1,965.00 பவுண்ட் என்றும் இந்திய மதிப்பில் 1,72,003.07 ரூபாய் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 1 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் உடையை அணிந்து கொண்டு ஜீ விருது விழாவில் பங்கேற்றுள்ளாரா ஆலியா பட் என ரசிகர்கள் பலரும் வாய் பிளந்துள்ளனர்.


மேலும் முன்னழகு எடுப்பாக தெரியும் படி உள்ள கவர்ச்சி கவுனை தாண்டி பலரது பார்வையை கவர்ந்தது அவர் அணிந்திருந்த அந்த மரகத நெக்லஸ் தான். அந்த நெக்லஸின் விலை மட்டும் சில கோடிகள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து ஆலியா பட்டின் இந்த லேட்டஸ்ட் விருது புகைப்படங்கள் இணையத்தில் தீயாகபரவி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement