• Apr 19 2024

ஆசைக் கணவரின் முகத்தை கடைசியாகப் பார்க்க வந்த அஜித்தின் தாயார்- கையைப் பிடித்து அழைத்து வந்த ஷாலினி

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் இன்று காலை மரணமடைந்தார்.85 வயதாகும் இவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.


அஜித் தந்தை உடலுக்கு திரையுலக சேர்ந்த ஏ.ஆர். முருகதாஸ், ஏ.எல். விஜய், மகிழ் திருமேனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அஜித் குமார் தந்தையின் இறுதி சடங்குகள் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் நடைபெற்றது. இதில் தகனம் செய்யும் இடத்தில் நடிகர் அஜித் தனது தந்தையை இறுதியாக பார்த்துக் கொண்டிருந்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருந்தது.


இந்த நிலையில் இப்போது அஜித்தின் தயாரின் கையைப் பிடித்துக் கொண்டு அவருடைய மனைவி ஷாலினி அழைததுச் செல்லும் பகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement