• Apr 16 2024

முருகதாஸின் முதல் படத்திற்கு அஜித் கொடுத்த அட்வான்ஸ் பணம்... அட இந்தளவு தானா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ். இவர் இயக்குநராக மட்டுமல்லாது திரைக்கதை ஆசிரியராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்து வருகின்றார்.  


'தீனா' என்ற படத்தின் மூலமாக சினிமாவிற்குள் இயக்குநராக என்ட்ரி கொடுத்த இவரின் இயக்கத்தில் ஏகபட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளமை அனைவரும் அறிந்த ஒரு விடயமே.

இந்நிலையில் 'சர்கார்' திரைப்படத்திற்கு பின் மீண்டும் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் தன்னுடைய 65-ஆவது திரைப்படத்தில் நடிப்பதாக ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் பின்னர் அவரை நிராகரித்து விட்டு இயக்குநர் நெல்சனை முடிவு செய்தனர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர்.


இதனால் தற்போது அனைவரும் முருகதாஸின் அடுத்த திரைப்படம் எப்போது உருவாகும் என்ற எதிர்பார்ப்போடு இருந்து வருகின்றனர். இது குறித்து பல தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து பரவி வந்த வண்ணம் தான் இருக்கின்றன.

இந்நிலையில் முருகதாஸின் முதல் படமான தீனா குறித்து சுவாரசியமான சம்பவம் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது அந்தப் படத்தை இயக்க தான் வாங்கிய அட்வான்ஸ் சம்பளம் குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் முருகதாஸ்.


அந்தவகையில் தீனா படக் கதையை அஜித்திடம் சொன்னவுடன் அஜித் அவரிடம் இருந்த இரண்டு 500 ரூபாய் தாள் மற்றும் தயாரிப்பாளரிடம் ரூ. 1 வாங்கி அங்கேயே தனக்கு அட்வான்ஸ் சம்பளத்தை கொடுத்ததாக முருகதாஸ் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.   


Advertisement

Advertisement

Advertisement