• Mar 29 2024

நெஞ்சுவலியை மூர்த்தியிடம் இருந்து மறைத்த தனம்- புதிய சிக்கலில் சிக்கிய கண்ணன்- கூலாக பதில் சொன்ன ஐஸ்வர்யா

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்

தனமும் மூர்த்தியும் துாங்கிக் கொண்டிருக்கும் போது தனம் நெஞ்சுவலியால் துாங்க முடியாமல் எழுந்திருக்க அந்த நேரம் பார்த்து மூர்த்தியும் எழுந்து கொள்கின்றார். அப்போது தனம் என்ன ஆச்சு மாமா என்று கேட்டபோது தனக்கு கெட்ட கனவு வந்ததைப் பற்றி சொல்கின்றார். அதாவது கண்ணன் ஓடுவதாகவும் அவனை யாரோ 4 பேர் விட்டுத்திரத்த அவன் அண்ணா என்று கத்துகிறான். அதனால் தான் திடுக்கிட்டு எழுந்து விட்டதாக  சொல்கின்றார்.


மேலும் கண்ணன் தனியாக எப்படி வாழப்போகின்றானா தெரில என புலம்ப தனம் சமாதானப்படுத்துகின்றார். இதன் பின்னர் மீண்டும் தனத்திற்கு நெஞ்சுவலி வர தனம் அதனை மூர்த்தியிடம் சொல்லாது மறைத்து விடுகின்றார். பின்னர் விடிந்ததும் கண்ணனும் ஐஸ்வர்யாவும் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். 

அந்த நேரம் கிரடிட் காசு கட்டாததால் ஆபிஸர்ஸ் வந்து மிரட்டிட்டு போகின்றனர். வியாழக்கிழமைக்குள்ள பணம் கட்டியே ஆகணும் என்று சொல்ல கண்ணன் அதிர்ச்சியடைகின்றார். இருந்தாலும் ஐஸ்வர்யா வெள்ளிக்கிழமை வளைகாப்பு முடியக் கட்டிடலாம் என்று சொல்கின்றார். தொடர்ந்து இவர்களைப் பார்க்க தனம் வருகின்றார்.


தனம் வளைகாப்பை கிராண்டாக பண்ணப் போறீங்க என்று சொல்லுறீங்க. பணம் இருக்கா என்று கேட்க கண்ணன் அதெல்லாம் இருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சமாளிக்கின்றார்.தனம் சென்றதும் ஐஸ்வர்யாவின் சித்தி வட்டிக்கு வாங்கிய 50 ஆயிரம் ரூபாவைக் கொண்டு வந்து கொடுக்கின்றார்.பணத்தை கட்டி விட்டு வட்டியை மட்டும் சரியாக கொடுக்கணும் என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement