• Apr 20 2024

நிச்சயதார்த்த மோதிரத்தை தூக்கி வீசிய ஐஸ்வர்யா- நட்சத்திராவைப் பார்த்ததும் அதிர்ச்சியான தீபா -கார்த்திகை தீபம் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இன்றைய எப்பிஷோட்டில் என்ன நடந்தது என்று பார்ப்போம்

 கார்த்திக் தான் திருமணம் செய்து கொள்ளும் பெண் நட்சத்திராவை காட்ட அதை பார்த்ததும் தீபா அதிர்ச்சி அடைகிறாள். இந்த பெண் தான் நாம் சிவா வீட்டுக்கு செல்லும்போது சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதை ஞாபகப்படுத்தி சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்து பின்பு வேண்டாம் என்று முடிவு செய்து சரி எனக்கு முக்கியமான வேலை இருக்கு நான் வரேன் என்று அங்கிருந்து கிளம்புகிறாள்.


அடுத்து கார்த்திக், நட்சத்திராவின் நிச்சயதார்த்தம் தொடங்க ஐஸ்வர்யா நிச்சயதார்த்த மோதரத்தை தூக்கி வீசி விட அது தீபாவின் தம்பி இனியன் கையில் கிடைக்க அவன் அதை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறான்.

அடுத்து நட்சத்திரா கார்த்திக்கு மோதிரம் போட அதை தீபா பார்த்து ரசிக்கிறாள். அடுத்து தீபா சென்றவுடன் கார்த்திக் நட்சத்திராவுக்கு போடும் மோதிரம் கேட்க ஐஸ்வர்யா என்னிடம் இல்லை என்று சொல்ல அபிராமி திட்டுகிறாள். அங்குள்ள அனைவரும் மோதிரத்தை தேடி பாருங்க மோதிரம் கிடைக்கவில்லை என அபிராமி வருத்தப்படுகிறாள்.அப்போது நட்சத்திரா அத்தை கவலைப்படாதீங்க நான் தான் கார்த்தி கைக்கு மோதிரம் போட்டேன்ல அதுவே போதும் என்று சமாளிக்க அனைவரும் ஆறுதல் அடைய பின்பு நட்சத்திராவும் கார்த்திக்கும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். 

அதன்பிறகு கல்யாணம் அடுத்த மாதம் 18ம் தேதி என முடிவெடுக்கின்றனர்.அடுத்து வீட்டிற்கு வரும் இனியன் மோதிரத்தை பார்க்க மைதிலி என்னவென்று கேட்க மோதிரம் என்றதும் மைதிலி கொடு என்று கேட்க உடனே இனியன் சென்று தன் அக்காவின் கையில் போட்டு விடுகிறான். தீபா ஏது என்று கேட்க கோவிலில் நடந்ததை சொல்ல அதை பார்த்து நிச்சயம் இது அபிராமி வீட்டு அம்மாவுடைய மோதிரம் தான் என்று சொல்ல அனைவரும் மோதிரத்தை கழட்ட முயற்சி செய்ய மோதிரம் வராமல் இருக்கிறது.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஷு தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Advertisement

Advertisement

Advertisement