• Apr 20 2024

முல்லையையும் தனத்தையும் திட்டித் தீர்த்த ஐஸ்வர்யா- அதிர்ச்சியில் மூர்த்தியும் கதிரும்- ஒன்றும் தெரியாதது போல் நின்ற கண்ணன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீயலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளதுஎன்று பார்ப்போம்.

வீட்டுக்கு வந்த தனம் கண்ணனை திட்டுகின்றார். உன்னால தானே இப்பிடி ஆச்சு, ஏன்டா தனியாக மொய் வச்ச என்று கேட்க உடனே ஐஸ்வர்யா கண்ணனை திட்டாதீங்க. எப்ப பார்த்தாலும் திட்டிட்டு இருக்கிறது தான் உங்க வேலையா என்று கேட்க தனம் தெரியாமல் திட்டிட்டேன் மன்னிச்சிரும்மா என்கிறார்.


பின்னர் முல்லை ஐஸ்வர்யாவைத் திட்ட ஐஸ்வர்யா நீங்களும் தானே தனியாக மொய் வச்சீங்க அதுக்கு பதில் சொல்லுங்க, எங்களெ மட்டும் கேள்வி கேட்காதீங்க என்று கூற முல்லையும் கதிரும் அதிர்ச்சியடைகின்றனர். பின்னர் முல்லை மல்லி என்னோட அக்கா தனியா மொய் வைக்க சொல்லி அம்மா சொல்லிச்சு. அதை உங்ககிட்ட சொல்ல நான் தான் மறந்திட்டன் அக்கா என்று கூறி சமாளிக்கின்றார்.

தொடர்ந்து ஐஸ்வர்யாவும் இதே மாதிரி தான் மீனா அக்காட அப்பா எங்க இரண்டு பேரையும் மதிச்சதே இல்லை. அதனால தான் நாங்க தனியா மொய் வச்சோம்.நிங்க சொன்ன மாதிரி தான் நாங்களும் அக்கா கிட்ட சொல்ல மறந்திட்டோம் என்று சொல்கின்றார். இதன்பின்பு கண்ணன் சம்பள விஷயத்தில் பொய் சொன்னதையும் முல்லை போட்டு உடைக்கின்றார்.


இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்ததோடு தனம்  போய் ஏன்டா கண்ணன் பொய் சொன்ன சம்பளத்தை தர வேணாம். ஆனால் எவ்வளவு தந்தாங்க என்று சொல்லலாம் தானே என சொல்ல ஐஸ்வர்யா நடிக்காதீங்க அக்கா, என்று கூறி திட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

அடுத்து வரும் எப்பிஷோட்டில் வீட்டை விட்டு வெளியே போகும் ஐஸ்வர்யா கண்ணனிடம் மதிக்காத இந்த குடும்பம் வேணுமா இல்லை நான்வேணுமா எது வேணும் என்று நீயே முடிவு பண்ணிக்கோ என்று சொல்கிறார். அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement