• Apr 20 2024

கண்ணனிடம் பணம் இல்லை என தெரிந்ததும் கோபப்பட்ட ஐஸ்வர்யா- மாமனாரால் கடுப்பான ஜீவா- சந்தோஷத்தில் இருக்கும் தனம்

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

 ஐஸ்வர்யாவுக்காக மட்டன் வாங்க கடைக்குப் போன கண்ணன் விலையைக் கேட்டு அதிர்ச்சியடைகின்றார். பின்னர் அரை கிலோ மட்டன் வாங்கிட்டுப் போகலாம் என்று முடிவெடுத்து வாங்கிட்டு மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்கப் போகின்றார். அங்கும் மருந்தின் விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கண்ணன் மருந்தையும் குறைத்து வாங்குகின்றார்.


தொடர்ந்து வீட்டுகக்கு வரும் கண்ணனிடம் கறி குறைவாக இருக்கே பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக் குடும்பமே இப்படித் தான் ரொம்ப கஞ்சத்தனம் பிடிச்சவங்க என்று சொல்ல கண்ணன் அண்ணன் வாரா வாரா மட்டன் வாங்கும் எங்கட குடும்பம் கஞ்சத்தனம் இல்லை இன்டைக்கு இதை சமையுங்க நாளைக்கு வாங்கித் தாரேன் என சமாளிக்கின்றார்.

கண்ணன் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லவும் ஐஸ்வர்யா அதைப் புரிந்து கொள்ளாமல் கண்ணனிடம் கோபித்துக் கொண்டு செல்கின்றார்.இது ஒரு புறம் இருக்க மீனாவின் அப்பா ஜீவா தன்னுடைய கடையை நல்லாப் பார்த்துக் கொள்வதாக மீனாவிடம் சொல்லி பாராட்ட மீனா ஜீவாவை நினைத்து சந்தோஷப்படுகின்றார். தொடர்ந்து ஜீவா வந்து கடைக்கு பொருட்கள் வாங்கும் ஒருவரைப் பற்றி சொல்கிறார்.


ஜனார்த்தனன் அவர் நல்லவர் எது செய்யிறது என்டாலும் என்னை கேட்டுச் செய்யுங்க என்று செல்ல ஜீவா கோபித்துக் கொண்டு கிளம்பி விடுகின்றார். பின்னர் தனம் யோசிச்சுக் கொண்டிருக்க முல்லை வந்து நீங்க ஐஸ்வர்யாவை நினைச்சு தானே கவலைப்படுறீங்க. கவலைப்படாதீங்க அவ நல்லா இருக்கிறா இப்போ தான அவ போட்ட வீடியோவைப் பார்த்தேன் எனச் சொல்கின்றார். இதனைக் கேட்ட தனம் மகிழ்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement