• Sep 21 2023

தனத்திற்கு தான் கான்சர் என்ற உண்மையை உடைத்த ஐஸ்வர்யா- கையெடுத்து கும்பிட்ட மீனா- அதிர்ச்சியில் உறைந்த ஜீவா- Pandian Stores Serial

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஹாஸ்பிட்டலுக்குப் போன முல்லை,கதிர்,மீனா,தனம் எல்லோரும் வீட்டுக்கு திரும்ப வருகின்றனர். அங்கே மீனாவின் அப்பாவின் காரைப் பார்த்ததும் மீனா ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ, எங்க அப்பா எல்லாம் வந்திருக்காரே என்று சொல்ல கதிர் பார்ப்போம் உள்ளே போய் ஏதாவது கேட்டால் சமாளிப்போம் என்று கூறுகின்றார்.


பதிலுக்கு தனமும் மாறி உளறி வைச்சிராதீங்க, தடுப்பூசி போடத்தான் போனோம் என்று சொல்லுங்க என்கின்றார். மறுபுறம் மூர்த்தியும் ஐஸ்வர்யாவின் சித்தி சித்தப்பா எல்லோரும் ஐஸ்வர்யாவைத் திட்டுகின்றனர்.அப்போது மீனா எல்லோரும் உள்ளே வர மீனாவின் அம்மாவும் அப்பாவும் ஓடிப்போய் என்ன ஆச்சு நீ நல்லா இருக்கிறியா என்று விசாரிக்கின்றனர்.

அதே போல  தனம் முல்லையையும் விசாரிக்கின்றனர். அவர்களும் தங்களுக்கு எதுவும் இல்லை என்று சமாளிக்கின்றனர். தொடர்ந்து மூர்த்தி ஏற்கனவே நீ போட்ட வீடியோவால் பட்டபாடு போதாதா ஏன்மா திருந்தவே மாட்டியா நீ என்று திட்டுகின்றார். இதனால் ஐஸ்வர்யா உண்மையைச் சொல்ல வர மீனா அவ இதை லைக்குக்காக பண்ணிட்டா, என்று சொல்லி சமாளிப்பதோடு ஐஸ்வர்யாவிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி கையெடுத்துக் கும்பிடுகின்றார்.


அப்போது மீனாவின் அப்பா இது உருப்படாதது என்று கண்டபாட்டுக்கு திட்டுகின்றார். பதிலுக்கு ஐஸ்வர்யாவின் சித்தியும் ஐஸ்வர்யாவை உனக்கு இருக்கிறதை வைச்சு வாழத் தெரியாமா பறக்கிற என்று எல்லாம் பேச, கோபமான ஐஸ்வர்யா நான் பொய் சொல்லல இந்த வீட்ல ஒருத்தங்களுக்கு கான்சர் இருக்கு என்று சொல்ல மூர்த்தி தனத்திடம் போய் யாருக்கு என்ன பிரச்சினை என்று கேட்கின்றார்.


அப்போது ஐஸ்வர்யா நீங்க எத்தனை முறை கேட்டாலும் அக்கா சொல்லமாட்டா, ஏன் என்றால் அக்காவுக்கு தான் மார்புப் புற்று நோய் என்று சொல்கின்றார். இதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement