• Apr 25 2024

மீண்டும் தாய் மாமாவான சிம்பு- தங்கை இலக்கியா பகிர்ந்த குட் நியூஸ்..குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் சிம்பு. இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'மாநாடு' திரைப்படம், 100 கோடிக்கும் மேல்  வசூலித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தில் உடல் எடையை குறைத்து புதிய தோற்றத்தில் சிம்பு நடித்திருந்தார்.

இதனைத்  தொடர்ந்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்த "வெந்து தணிந்தது காடு" திரைப்படம், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


தற்பொழுது சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், "எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது." என பதிவிட்டுள்ளார்.


2014 ஆம் ஆண்டில் இலக்கியா, அபிலாஷ் என்ற பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 8 வயதில் ஜேசன் என்ற மகன் உள்ளார். இலக்கியாவுக்கு சிம்பு ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement