பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துவருகிறார். அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் .
அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து இளம் நடிகையாக வலம் வருவதோடு கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.
எப்போதுமே சோஸியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகின்றார் சாக்ஷி அகர்வால் .இன்ஸ்டாகிராமில் மொத்த கிளாமர் காட்டி வெளியிடும் இணையத்தில் அதிகம் வைரல் ஆவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
சாக்ஷி எதற்காக இப்படி எல்லைமீறி கவர்ச்சி காட்டுகிறார் என சிலர் அவரை விமர்சித்தும் வருகின்றனர்.
இவ்வாறுஇருக்கையில் சாக்ஷி சமீபத்தில் ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் தான் எஸ்ஏசி இயக்கி வரும் 'நான் கடவுள் இல்லை' என்ற படத்தில் நடித்து வருவதாக சொன்னார்.
"இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கவர்ச்சியான வீடியோ, போட்டோக்களை பார்த்து தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக எஸ்ஏசி என்னிடம் கூறினார்" என அவர் தெரிவித்து உள்ளார்.
நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏசி ஏன் இப்படி இருக்கிறார் என நெட்டிசன்கள் தற்போது கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
Listen News!