• Mar 28 2024

விஜய்யைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்களை சீண்டி சர்ச்சையில் சிக்கிய பிரதீப் ரங்கநாதன்- கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


ஜெயம் ரவி , காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கோமாளி.இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன்.இதனைத் தொடர்ந்து இவர் இயக்கி நடித்த திரைப்படம் தான் கோமாளி.


இப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டானதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.லவ் டுடே திரைப்படத்திற்கு பிறகு தனது சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே திரைப்படத்திற்கு சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். 


அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டுக்களை தெரிவித்தார். ரஜினிகாந்துடனான போட்டோக்களை பிரதீப் ரங்கநாதனே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். தனது கோமாளி படத்தில் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து கிண்டலடித்திருந்தார் பிரதீப். 

ஆனாலும் அதை பெரிதுப்படுத்தாமல் அவரை அழைத்துப் பேசி பாராட்டு தெரிவித்தார் ரஜினிகாந்த்.இந்நிலையில் தற்போது மீண்டும் ரஜினிகாந்த் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.அதாவது, ரஜினிகாந்தின் ரசிகர்களை மெண்டலான்ஸ் என குறிப்பிட்டுள்ள டுவிட்டை லைக் செய்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். ஏற்கனவே நடிகர் விஜய், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவதூறாக பதிவிட்டிருந்தார். அவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


அதனை பார்த்த விஜய் மற்றும் யுவனின் ரசிகர்கள் பிரதீப் ரங்கநாதனை வாய்க்கு வந்தப்படி வசைப்பாடி வந்தனர். இதையடுத்து தான் புரியாத வயதில் ஒரு வேகத்தில் அந்த பதிவுகளை வெளியிட்டதாக கூறி விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் ரஜினி ரசிகர்களை சீண்டும் வகையில் மெண்டலான்ஸ் என்ற பதிவை பிரதீப் ரங்கநாதன் லைக் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement