• Apr 25 2024

த்ரிஷா, நயன்தாராவை அடுத்து அமலாபாலிற்குக் கிடைத்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை அமலாபால். இந்த இரண்டு மொழிகளிலும் டாப் நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நிறைய படங்கள் நடித்துள்ளார்.


குறிப்பாக கன்னடத்தில் 'Hebbuli' என்ற படத்தின் வாயிலாக நாயகியாக நடிக்க ஆரம்பித்த இவர் அதன்பிறகு மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து 'வீரசேகரன்' என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாக அடுத்தடுத்து அவருக்கு 'சிந்து சமவெளி', மைனா' போன்ற படங்கள் பெரியளவில் ரீச் கொடுத்தது.

இந்நிலையில் தற்போது இவர் தெலுங்குப் படம் ஒன்றில் இணைய உள்ளதாகக் கூறப்படுகின்றது. அதாவது தென் இந்திய வட இந்திய படங்களுக்கான இடைவெளி ஆனது சமீப காலமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தென் இந்திய படங்களை இந்தி ரசிகர்கள் விரும்பி பார்க்க தொடங்கி உள்ளனர். 


இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர், நடிகைகளை இந்தி படங்களில் நடிக்க வைக்க அங்குள்ள இயக்குநர்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். உதாரணமாக த்ரிஷா இந்தி படம் ஒன்றில் நடித்துள்ளார். அதேபோன்று நயன்தாரா 'ஜவான்' படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து வருகிறார். அத்தோடு 'பேமிலிமேன் 2' இந்தி வெப் தொடருக்கு பிறகு சமந்தாவுக்கும் இந்தி பட வாய்ப்புகள் வந்துள்ளன. 


இந்த வரிசையில் தற்போது அமலா பாலும் இணைந்துள்ளார். அதாவது இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் அஜய்தேவ்கானின் 'போலா' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். கார்த்தி நடித்து தமிழில் வெற்றி பெற்ற கைதி படத்தின் இந்தி ரீமேக்காக இப்படமானது தயாராகிறது. 

மேலும் இந்த படத்தை அஜய்தேவ்கானே இயக்கியுள்ளதோடு அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பில் அமலாபால் பங்கேற்க உள்ளாராம். இப்படத்தில் தபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement