பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒருவர் வெளியேறுவது வழமை. அந்தவகையில் ஏற்கனவே இந்த வாரம் அசல் கோளார் தான் வெளியேறுகிறார் என்ற தகவல் லீக்கான நிலையில், நேற்றைய எபிசோடில் அவர் எப்படி வெளியேறினார் என்ற காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கின்றன.
அதுமட்டுமல்லாது தான் ஏன் தான் இந்த இடத்துக்கு வந்தேன் என்றே தெரியல என அசல் சொன்னதையும் நெட்டிசன்கள் பலர் ட்ரோல் செய்து வந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து "அசல் போக மாட்டான் சார், அவன் இருக்கணும், எனக்காக இருக்கணும்" என நிவாஷினி சொன்ன நிலையில், அசல் தான் இந்த வாரம் எவிக்ஷன் என கமல் கார்டை காட்டியதும் உடனே அழ ஆரம்பித்த நிவாஷினி "என்னால தானா அசல் வெளியேறினான்" என கூட இருந்த சக போட்டியாளர்களிடம் கேட்டார்.
பின்னர் பாத்ரூம் ஏரியாவின் உடை மாற்றும் அறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டு அழ ஆரம்பித்த நிவாஷினி அடுத்ததாக படுக்கையறையில் ராபர்ட் மாஸ்டர் வந்து சமாதானம் செய்யும் வரை அழுகையை நிறுத்தாது தொடர்ந்து அழுத வண்ணமே இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அடுத்த வாரமே நீயும் வெளியே போய் அசல் உடன் டூயட் பாடு என கலாய்த்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் எடிட்டர் நிவாஷினி அசலுக்காக அழுது கொண்டிருப்பதை மட்டுமல்லாமல் தனது குசும்புத்தனத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். அதாவது கடைசியாக ஏடிகே உடன் செம ஜாலியாக சிரித்து பேசி அடுத்த ஆடு சிக்கிடுச்சு என்பது போல அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் காட்சியையும் காட்டி விட்டார்.
இந்நிலையில் அசலைத் தொடர்ந்து அடுத்த வாரம் நிவா யாருடன் நெருக்கமாக இருக்கப் போகிறார் என்பதை கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
Listen News!